Sunday 30 August 2020

சைவ சமயத்தின் அரசியல்

அரசியல் ஒரு துறையாக அமையமுன்பே சைவம் இருந்தது.  சைவ சமயமே தமிழ் மக்களை வழிப்படுத்திவந்தது.  சைவ  சமயமே பழக்கவழக்கங்களையும் நீதி நெறிகளையும் தந்தது. சைவ சமயமே  கலாச்சார பண்பாடுகளையும்  தந்தது.தமிழ் இனத்தின் முக்கிய அடையாளங்கள்  சைவ  சமயத்துடன் கலந்துள்ளன.  சைவ  சமயதத்தின் வாசனையே தமிழ்மொழியிலும் கலந்துள்ளது. சைவ  சமயமே  தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளாக உள்ளன.சைவ  சமயத்தின் நீதி நெறிகளே பிற்காலங்களில் பிற இனத்தவர்களின் சட்டங்களாகின, 

இலங்கை அரசியல் வரலாறு YouTube's Channel


ஈழப்பிரச்சனையின் ஆரம்ப அத்திவாரம் கொட்டகேனா கலவரம் Kottehena Riots  தேசத்தின் குரல் பாகம் 1

https://www.youtube.com/watch?v=pE7Q2B_TE5g&feature=youtu.be&fbclid=IwAR0LDaJmYHVtD25bynG0-RkhIvtrR-8C3KPkSjSIs10TQj2c1MWqxOFfLBY

தமிழ் தேசியத்தை புதைகுழிக்குள் கொண்டு சென்றவர் யார்?.................

https://www.youtube.com/watch?v=TEW0IdnENtQ&feature=youtu.be&fbclid=IwAR3tlW3iAguJ8A5elUlCoCucxd5swwanArSXjEn7aKP_8f3d92zf4EzSozs


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துரோகம் பாகம் -1

https://www.youtube.com/watch?v=rVm-MeQm5h0&feature=youtu.be&fbclid=IwAR0BNTTnlosDIbwBh5uVFwUIpvAxliOGy3kpQ3SXZ0dK43mevCQxnR92O-8

ஈழத்தமிழரின் தியாகத்தில் குளிர்காயும் கறுப்பு ஆடு?

Wednesday 26 August 2020

ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலைப்புலிகள் Erik Solheim.

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெயம் தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் பழைய விடயங்களை கிளறி பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை மற்றும் விடுதலைப்புலிகளின் தனிநாட்டு கோரிக்கை தொடர்பில் அவர் தெரிவித்துள்ள விடயங்களை விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு







https://www.tamilwin.com/special/01/254506?ref=home-top-trending

பழந்தமிழர்களின் வான்வழிப்பயணம்

செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என அழைத்தனர். இன்றைய அறிவியல் வல்லுனர்கள் செவ்வாய் கோளில், மண் சிவப்புநிறமாய் இருப்பதனை அறிவியல் ஆய்வு மூலம் புலப்படுத்தியுள்ளனர்.

வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என அழைத்தனர். வெள்ளிக் கோளில் வெள்ளித்தாது இருப்பதனை இன்று அறிவியல்ஆய்வு புலப்படுத்தியுள்ளது. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதனால் இதனை விடிவெள்ளி என்றனர். 

புதிதாகக் கண்டறிந்த கோளைப் புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததனால் அதற்கு  ‘அறிவன்’ எனவும் பெயருண்டு.வியா என்றால் பெரிய, நிறைய எனப் பொருள்படும். வானில் பெரிய கோளாக வலம் வருவதனையே  வியாழன்  என்றனர். சனிக்கோளைக் காரிக்கோள் என அழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது. ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும், அந்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச்  சூழ்ந்த மண்டிலமும்.

தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் எனவும்,ஞாயிற்றிடமிருந்து ஒளிப்பெற்று ஒளி விடக்கூடியவற்றைக் கோள்மீன் எனவும் பண்டைத்தமிழர் குறிப்பிட்டுள்ளனர். தமிழரின் வானியல் அறிவு இரு கூறுகளைக் கொண்டது. ஒன்று வான் இயற்பியல் (Astro Physics) மற்றது கணியத்தோடு கூடிய பிறப்பியம் (Astrology). இந்த வான் இயற்பியலை மற்கலியின் முன்னோர்கள் செழுமைப் படுத்தியுள்ளனர். இத்தகைய அறிஞர்கள்களை தொல்காப்பியர் “அறிவர்” எனப் பாராட்டுவார். அறிவர்களே கணியர்கள்.

பனியும் வெயிலுங் கூதிரும் யாவும்
துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய
தனிவுற் றறிந்த கணிவன் முல்லை
அறிவன் என்றது கணிவனை. மூவகைக் காலமும் நெறியினாலாற்று தலாவது `பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் மூவகைக் காலமும் `நெறியின் ஆற்றிய அறிவன்’ என்றார். உதாரணம்:

புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
விண்ணில் வுலகம் விளைவிக்கும் விளைவெல்லாங்
கண்ணி யுரைப்பான் கணி.
இவ்வாறு இளம்பூரண அடிகள் அறிவன் என்பதற்குக் கணிவன் என்று பொருள் கூறுகிறார். ஏறத்தாழ கி.மு.14 ஆம் நூற்றாண்டினர் எனக் கருதப்படும் தொல்காப்பியர், தம் இலக்கண நூலில் வானியல் குறிப்புகளைத் தெளிவாக குறித்திருக்கிறார்.இனி, சூத்திரம்:

‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு-மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறு இல் செய்தி மூவகைக் காலமும்,
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
நால்-இரு வழக்கின் தாபதப் பக்கமும்,
பால் அறி மரபின் பொருநர்கண்ணும்,
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலைபெற்றது’ என்மனார் புலவர். – தொ.கா, பொருளதிகாரம், புறத்திணையியல், 74

இதன் ஒவ்வொரு வரிக்கும் நீண்ட விளக்கங்களை உரையாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இதில் விரிவானதும், மிகச்சிறப்பானதும் நச்சினார்க்கினியரின் உரை. முழு உரையையும்  காணலாம். அறிவன் என்பதற்கு கணியன் (சோதிடன்) என்று இளம்பூரணர் பொருள் கொள்கிறார்.

 இது ஞானியைக் குறிக்கவில்லை, மூவகைக் காலம் என்பது மழையும் பனியும் வெயிலும் என்கிறார். நடைமுறை சார்ந்த அவரது யதார்த்தவாதம் இதில் வெளிப்படுகிறது. “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” – குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்.

இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிரு படலத்துள், “பனியும் வெயிலுங் கூதிரும் யாவும், துனியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை” எனவும் ஓதுதலின் மேலதே பொருளாகக் கொள்க. அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் ‘மூவகைக் காலமும் நெறியின் ஆற்றின் அறிவன்’ என்றார்.

தமிழரது அறுபது ஆண்டுகள் என்ற ஆண்டுக் கணிப்பும், கதிரவன், திங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழர் வகுத்துள்ளனர். 12 ஆண்டுகளை ஒரு மாமாங்கம் எனக் கணிக்கும் தமிழர் வழக்கம் தமிழரிடம் இருந்துள்ளது. தமிழர் கண்டறிந்து வழக்கிற் கொண்ட வானியல் செய்திகளை உலகப் பேரறிஞர் பலர் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். சிலேட்டர் என்னும் “அறிஞர் தமிழரின் வானவியல் கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணித முறைகளிலும் நிதானமானது” எனக் கூறியுள்ளதாக முனைவர் அ.தட்சணாமூர்த்தி தமிழர் நாகரிகமும் பண்பாடும் (பக்: 166) என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழர், வானியலை நன்கறிற்தோரைக் ‘கணியர்’என குறிப்பிட்டிருக்கின்றனர். வானில் வலம் வரும் கோளின் அசைவுகளைக் கொண்டு காலத்தைக் கணித்து நன்மை தீமைகளைக் கூறுபவராகக் கணியர் திகழ்ந்துள்ளனர். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் என்ற அறிவர்களின் பெயர்கள் இக் கூற்றுக்குச் சான்றாகின்றன. அரசர் அவையில் பெருங்கணிகன் என்ற வானியல் அறிஞன் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது.

விசும்பு (Space)

ஆங்கிலத்தில் “space” என அழைக்கப்படுகின்ற விண்வெளியைத் தமிழர் விசும்பு எனக் குறிப்பிட்டனர். விண்ணுக்கும் (sky) விசும்பிற்கும் (Space) உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தனர். விசும்பிற்கும் அப்பால் பரந்து விரிந்த வெளியை அண்டவெளிகள் (Galaxy) என்றனர். இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ (Galileo தொலைநோக்கி வாயிலாக அண்டங்களைக் கண்டறிவதற்கு முன்பாகவே தமிழர் கொண்டிருந்த வானியல் அறிவு வியப்பை ஏற்படுத்துகின்றது. பழம் பெரும் இலக்கணமான தொல்காப்பியம்,

“நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்”   (தொல்:  பொரு: 90)

 என அக்கால ஐம்பூத இயல்பைக் குறிப்பிடுகின்றது.

முதலில் விசும்புதான் இருந்தது. அங்கே சூரியக் குடும்பங்கள் தோன்றின. அவை சுழலும் போது தீ உண்டாயிற்று. அதிலிருந்து ஒளி பிறந்தது. சூரியக் குடும்பங்கள் உதிர்ந்த தீப்பிழம்புகள் கோள்கள் ஆயின. அவை சுழலும்போது காற்று ஏற்பட்டது. காற்றோடு கலந்த கோள்களில் தண்ணீர் கிடைத்தது. அக்கோள்கள் குளிர்ந்த பின் மண் உண்டாயிற்று.  (திரு. இராசகோபாலன் - இலக்கியத்தில் வானியல் பக்:17-18) புறநானூறு என்ற சங்ககால இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள இச் செய்தி இன்றைய அறிவியலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வானியல் உண்மையாகும்.

“மண் திரிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை” (புறம் 2)

மண்ணிருந்து பார்க்கும் போது விண் நீலமாகவே தெரியும். ஆயினும் விசும்பு இருள் மயமானது என்பதைக் கண்டறிந்து சொல்கிறது மலைபடுகடாம் என்ற இலக்கியம். “திருமழைத் தலைஇய இருள்நிற விசும்பின்..” (மலைபடு: 1-2) யுகம் என்பதனை தமிழர் அக்காலத்தே ஊழி என அழைத்தனர். ஊழிகளைத் தொடர்ந்தே வானம், காற்று, தீ, நீர், நிலம் என்பன தோன்றின என்பதை பரிபாடல் என்ற இலக்கியம் தெளிவாகக் கூறுகின்றது.

“விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு” - பரிபாடல்-2

முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றின. பூமியின் தோற்றம் பற்றிய தமிழரது இத்தெளிவான செய்தியை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.



ஞாயிறு (Sun)

ஞாயிறை நன்கு ஆராய்ந்த அறிவியலாளர் கதிரவன் ஒரு திடப்பொருள் அல்ல என்றே கூறுகின்றனர். கதிரவனில் காணப்படும் பல தாதுப்பொருட்கள் (Minerals) ஆவி உருவில் இருக்கின்றன என்றும் அவை எரிவதாலேயே நமக்கும் வெப்பமும் ஒளியும் கிடைப்பதாகக் கூறுகின்றனர். பெரும்பாணாற்றுப்படை கதிரவனைப் “பகல் செய் மண்டிலம்” எனக் கூறகின்றது.

கதிரவனுடைய தன்மைகளையும் பயன்களையும் நன்கு உணர்ந்த தமிழர் பழங்காலந் தொட்டே கதிரவனை வழிபட்டு வந்துள்ளனர். சிலப்பதிகாரம் என்ற ஒப்பற்ற இலக்கியத்தை ஆக்கிய இளங்கோவடிகள் தன் கடவுள் வாழ்த்தில் ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’எனக் கதிரவனுக்கே முன்னுரிமை வழங்குகின்றார்.

வெண்மை என்பது தனி நிறம் அல்ல, அது ஏழு நிறங்கள் முறைப்படி சேர்ந்த கலவை என அறிவியலாளர் கூறுகின்றனர். கதிரவனில் VIBGYOR என்கின்ற ஏழு வண்ணங்கள் உண்டு என்பதை அறிவியல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை சங்கப் புலவரான கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்ற இலக்கியத்தில் கதிரவன் ஏழு வண்ணக் குதிரைகள் பூட்டிய தேரில் கதிரவன் உலா வருகின்றான் என்கிறார்.

“எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கல்சேர்வு மறைய” (குறிஞ்சிப் பாட்டு)

இரவுப் பொழுதில் துருவ மீனைக் கொண்டு திசையறிந்த தமிழர் பகலில் நான்கு திசைகளையும் கதிரவன் துணை கொண்டு அறிந்தனர். சித்திரைத் திங்கள் பத்தாம் நாளுக்குப் பின் கதிரவன் தமிழகப் பரப்புக்கு மேல் தலை உச்சியில் இருப்பதைக் கண்டறிந்தனர். அன்றைய நாளில் இரண்டு கோல்களை நட்டு, அக் கோள்களின் நிழல் தரையில் விழும் நிலையைக் குறித்துத் திசைகளைக் கணக்கிட்டனர் என்பதை நெடுநல்வாடை என்ற இலக்கியம்,

“விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதன் கயிறிட்டு”   (நெடுநல்வாடை)

எனக் கூறுகிறது.

கதிரவனை மையமாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானவியற் கூற்றைக் கி.பி 1543 இல் கண்டறிந்து வெளியிட்டவர் கொப்பர்னிக்கஸ் என்ற வானவியல் அறிஞராவர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கதிரவனை முதலாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதைக் கண்டறிந்தனர் என்பதை நீலகண்ட சாஸ்திரி என்பார்,

“என்றூழ் உறவரு மிருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை யுள்படுவோரும்” (பரி. 19:46-47)

என்ற பரிபாடல் வரிகளை ஆதாரம் காட்டிக் கூறியுள்ளார். (தமிழர் மரபுச் செல்வங்கள் பக்: 119)
“சுடர் சக்கரத்தைப் பொருந்திய ஞாயிறு முதலான கோள்களது நிலைமையை வரைந்த ஓவியங்களால் அறிவோரும்” எனப் பொருள் தருகின்றன இவ்வரிகள். 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட சூரிய மையக் கொள்கை சங்கத்தமிழரால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது.

“வாள்நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு”      (சிறுபாண் - 242 243)

‘ஒளி மிக்க வானில் கோள்மீன்களால் சூழப்பட்ட இளம் கதிர்களைக் கொண்ட கதிரவன்’ என்பது இவ் வரிகளின் பொருளாகும். கதிரவனின் மையப் பகுதியில் வெப்பம் கனன்று கொண்டிருப்பதை நற்றிணை ‘அகங்கனலி’ எனக் கூறுகின்றது. கதிரவனில் இருந்து வெளியேறும் தீ நாக்குகளை ‘நெடுஞ்சுடர்க் கதிர்’ எனக் குறிப்பிடுகின்றது.

கோள்கள் (Planets)

உலகம் தட்டையா ? உருண்டையா ?

விசும்பு அண்டம் (Outer Space) எங்கும் பரவிக் கிடக்கும் கோள்களைப் பற்றிப் பழந்தமிழர் நன்கு தெரிந்துகொண்டிருந்தனர். கோள் என்பது கோளம் (Globe) என்ற உருண்டை வடிலான பொருளைக் குறிக்கும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். பூமி உட்படக் கோள்கள் யாவும் உருண்டையானது எனத் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். கோள் என்பதற்கு வளைதல் என்ற பொருளும் உண்டு. விசும்பு வெளியில் இவை வளைந்து சுழன்று வருவதால் கோள் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பர்.

பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்புவரை, உலகம் தட்டையானது என்றே நம்பி வந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் காபர்நிகஸ் (Nicolaus Copernicus) என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என முறையாகக் கணித்து கூறினார். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ, உலகம் உருண்டையானது என்பதனைத் தம் தொலைநோக்கியால் கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் மக்கள் ஏற்றுக்கொண்டனர். மேலை நாட்டினர் கண்டறிந்ததற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியது திருக்குறள்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

விசும்பில் ஒளிரும் பொருட்களை மீன் என்றே அழைத்தனர். தாமே ஒளிவிடக் கூடியவற்றை நாண்மீன் எனக் குறிப்பிட்டனர். கதிரவனின் ஒளி கொண்டு ஒளிர்வனவற்றைக் கோள்மீன் எனக் குறிப்பிட்டனர். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பன ஞாயிறின் ஒளி கொண்டு ஒளிரும் கோள்களாகும்.

அகன்ற மன்றத்தில் ஆட்டுக்கிடாய்களும் சிவலைப் பறவைகளும் விளையாடும் காட்சி நீலவானில் நாண்மீன்களும் கோள்மீன்களும் கலந்திருப்பதைப் போல் இருந்தது எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.
நீநிற விசும்பின் வலனேர்பு திரிதரு

நாண்மீன் விராய கோணமீன் போல
மலர்தலை மன்றத்து......   (பட்டி. 67-77)

கதிரவக் குடும்பத்தில் ஒன்பது கோள்மீன்கள், அவற்றின் துணைக் கோள்கள், குறுங்கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் என்பன உள்ளதாக விண்ணியல் அறிஞர் கூறுவர். இக்கோள்களைப் பரிபாடற் பாடலொன்று பட்டியலிடுகின்றது.

“தீவளி விசும்பு நிலம் நீர் ஐந்தும்
ஞாயிறும் திங்களும் மறனும் ஐவரும்” (பரி. 3: 4-5)

இப்பாடல் தீ, காற்று, விண், நிலம், நீர் என்ற ஐம்பூதங்களோடும்  ஞாயிறு திங்கள் என்ற முதன்மைக் கோள்களோடும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஐந்து கோள்களையும் குறிப்பிடுகின்றது. கோள்களைப் பற்றிய தெளிவான செய்திகள் சிலவற்றைப் பரிபாடல் தருகின்றது.

“விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்.   (பரிபாடல் 11: 1-15) இப்பாடலின் பொருளை முழுமையாக விளங்கிக் கொள்வது சிறப்பானது.

திங்கள் (Moon)

மதி, நிலா என தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்ட துணைக் கோள் திங்களாகும். இதனை இப்போது சந்திரன் என்ற வடமொழிச் சொல்லால் அழைத்து வருகின்றோம்.திங்களானது கதிரவனோடு சேர்வதுவும், பிரிந்து எதிர்ப்பக்கமாகச் சேர்வதுவும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும். இதனை,

“மாசு விசும்பின் வெண்டிங்கள்
மூவைந்தான் முறை முற்ற”  (புறம் 400)

என்பதால் அறியலாம். திங்கள் வளர்கையில் 15 நிலைகளை உடையது. அது போல் தேய்கையிலும் பதினைந்து நிலைகளை உடையது. எட்டாம் நாள் பிறை நிலவு ‘எண்ணாட்டிங்கள்’ (புறம் 118) எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. முழுநிலாவை உவவுமதி என அழைத்துள்ளனர். முழுமதி நாளில் கதிரவனும் திங்களும் எதிரெதிராக இருக்கும். இதனை,

“உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி யொருசுடர்

புண்கண் மாலை மறைந்தாங்கு”  (புறம் 65) என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகின்றது.

செவ்வாய் (Mars)
பூமியில் இருந்து நோக்கும் போது செந்நிறம் உடையதாகத் தோன்றும் கோள் செவ்வாய் ஆகும். செந்நிறமாய் இருந்த கோளை செவ்வாய் என்றனர். செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு என்பதையும் நம்மவர் என்றைக்கோ கண்டுபிடித்துச் சொல்லிவிட்டனர். மேலும் இக்கோளினை செம்மீன், அழல் எனப் புறநானூறும், பதிற்றுப்பத்தும் குறிப்பிடுகின்றன. பரிபாடல் இதனைப் படிமகன் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. அக்காலத்திலேயே இதைக் கண்டறிந்து பொருத்தமுறச் செவ்வாய் எனப் பெயரிட்டுள்ளனர். கடலின் மேல் தோன்றுகின்ற சிறிய திடலின் மேல் ஏற்றப்பட்ட சிறு விளக்குப் போல் செவ்வாய் தோன்றுகின்றது என்பதை

முந்நீர் நாப்பன் திமிற்சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாவிசும்பின்” (புறம். 60: 1-2)புலவரான மருத்துவன் தாமோதரனார் கூறுகின்றார்.

வெள்ளி (Venus)
பழந்தமிழர் வானவியலில் பெரிதும் பேசப்பட்ட மற்றுமொரு கோள் வெள்ளி ஆகும். இக்கோள் வெண்மை நிறமுடையது, ஆகையால் வெள்ளி எனப் பெயர் பெற்றது என்பர். பெரும்பாலும் வெள்ளியென்றே அழைக்கப்பட்டு வந்ததாயினும் வெண்மீன், வைகுறுமீன், வெள்ளிமீன் போன்ற பெயர்களிலும் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம்.இது வெண்மை நிறமுடையதால் வெள்ளி எனப்பட்டது. இது காலையிலோ மாலையிலோ தோன்றும். காலையில் தோன்றுவதை விடிவெள்ளி என்பர். வெள்ளியை மழைக்கோள் என்றும் அழைப்பர். வெள்ளி தெற்கு நோக்கி நகர்ந்தால் மழை பொழியும் என நம்பினர்.

“வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை”  (புறம். 339)

சனி (Saturn)
கோள்களில் தொலைவில் இருப்பதுவும் கரிய நிறமுடையதுவும் சனி ஆகும். கருநிறம் பொருந்தியதாகக் கருதப்பட்டதனால் இது காரிக்கோள்  மற்றும் மைம்மீன் என்றனர். காரி என்பதே இதன் தூய தமிழ்ப் பெயராகும். பின்னாளில் வடமொழிப் பெயரான சனி செல்வாக்குப் பெற்றுவிட்டது. சனியானது புகைக்கின்ற போதும் ( அதாவது ஓரைகளான இடபம், சிங்கம், மீனம் என்பவற்றில் சனி நுழைகின்ற போதும்) தூமம் என்ற வால் வெள்ளி தோன்றுகின்ற போதும் தென்திசை நோக்கி வெள்ளி ஓடினாலும் பெரும் தீங்கு விளையும் என பழந்தமிழர் நம்பினர்.

“மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்...” (புறம் 117)

எனத் தொடர்கின்ற இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் கபிலர் ஆவர். சனி சில (இடபம், சிம்மம், மீனம்) ஓரை(இராசி)களில் நுழையும் போதும், வால் வெள்ளி தோன்றினாலும், வெள்ளி தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. பெருந்தீங்கு விளைவிக்கவல்ல நிலைகளில் கோள்கள் இருந்தாலும் பாரியின் பறம்பு செழிப்புக் குன்றாத நாடு. ஆயினும் பாரியை இழந்ததால் பறம்பு வளம் குன்றியது என இப்பாடலில் கபிலர் குறிப்பிடுகின்றார்.இதையே சிலப்பதிகாரம்,

“கரியவன் புகையினும் தூமம் தோன்றினும்
 விரிகதிர் வெள்ளி தென்புலம் பாடரினும்” சிலம்பு (10-102-10) எனக் கூறுகின்றது.

புதன் (Mercury)
புதிதாக கண்டறிந்தத கோள் புதன் என அழைக்கப்பட்டது. ஞாயிறுக்கு மிக அருகில் இருந்ததால் ”உடன்” என்று அழைக்கப்பட்டு, புதன் என்றானது. இதே பரிபாடல் புதன் கோளைப் புந்தி என்ற பெயரிட்டு அழைக்கிறது. புதன் கோளுக்கு அறிவன் என்ற பெயரும் உண்டு.

வியாழன் (Jupiter)
"வியா" என்றால் பெரிய என்ற பொருள். வியாழனை ”ஆண்டளப்பான்” என்றும் ”ஆசான்” என்றும்  தமிழ் வள்ளுவர்கள் வடித்தனர். வியாழக் கணிதம் எனும் தனிக்கணக்கு  கணியத்தில் உள்ளது. வியாழன் பெயர்ச்சியை (குரு பெயர்ச்சி) வைத்தே இன்றுவரை கணியம் சொல்லி வருகின்றனர்.

பொழுது நம் முன்னோர் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களைக் குறிப்பதாகும். அதாவது 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களைக் குறிப்பதாகும். நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம். அவ்வாறெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24-6 1440 ஆகும். ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர்.

இவ்வாறான இந்தக் காலப்பகுப்பு வானியல் பற்றிய அறிவின்றி வகுக்க முடியததாகும்.

அறிவியற்துறை பெருவளர்ச்சி கண்டிருக்கும் இக்காலத்தில் வானவியற் பற்றிய ஆராய்வுகளுக்குப் பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. தொழில் நுட்பக் கருவிகள் எதுவும் இல்லாத அக்காலத்தில் விசும்பில் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களின் வகையறிந்து, அவற்றின் இயக்கங்களை அறிதியிட்டு, அவை உயிர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை முன்னோர் கணித்திருக்கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வானியல் பற்றிய ஆராய்வுகளுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரது வானியற் சிந்தனைகள் வெளிப்பட்டிருந்தன.

தமிழரது வானியற் கருத்துகள் எதுவும் மாணவரது பாடநூல்களில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இவை பெரும்பாலும் ஐரோப்பியரது வானியல் ஆய்வுகளை மையப்பபடுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. வானியற்துறை மட்டுமல்ல, தமிழர்  சிறந்து விளங்கிய துறைகள் பலவும் தமிழ் மாணவரது அறிவியல், வாழ்வியற் கல்வியில் இடம்பெறாதிருப்பது வேதனைக்குரியதே. இலக்கியக் கல்வியிலும், அரிதாகச் சிலர் ஆய்வுகளில் ஈடுபடும் பொழுதுகளிலும் மட்டுமே இத்துறைகள் பேசப்படுகின்றன.

வான்வழிப்பயணம் (Space Travel)

பழந்தமிழ் இலக்கியங்களில் வான்வழிப் பயணங்கள் பற்றி கூறுகின்றன. வலவன் ஏவா வானூர்தி (புறம் 27 : 8) என்னும் புறப்பாடல் வரி, சங்க காலத்திலேயே ஓட்டுநர் இல்லா வானூர்தி இருந்தது என்னும் வியக்கத்தக்க செய்தியைத் சைவ தமிழர்களின் வான்வழிப்பயணம் தருகிறது.

தமிழனின் வானியல் தொழிற்நுட்பம்.பகுதி--1

பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே.தமிழருக்கு அறிவியல் அறிவு இல்லை என்று எந்த முட்டாளாவது சொன்னால் அவனிடம் மறக்காமல் இதைச் சொல்லிவிடுங்கள்.

திருமூலர்--.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.  அறிவியலால் இறைவனை நிரூபிக்க  நிரூபித்துக்காட்டிய தமிழ் மகான் திருமூலர்.பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பது அறிவியல் உண்மை. இப்படியாக அணு முக்கியமானதான பார்க்கப்படுகிறது. அதைக்கொண்டே ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. சைவத்தின் நாயகரான சிவனை அணுவிற்குள் அணுவாய் இறைவர் இருக்கின்றார் என்கிறார் திருமூலர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே. பத்தாவது தமிழ்வேதமாக விளங்கும் திருமந்திரத்தில் சித்தர் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே – திருமந்திரம். [ திருமூலர் ]

இப்பாடலில் அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணுவிற்குள் இறைமை உள்ளது என்றும், அணுவிற்கு அணுவாயும், அணுவிற்கு அப்பாலாயும் இறைமை உள்ளது அவர் கூறியுள்ளது வியக்க வைக்கிறது.
தற்கால அறிவியலை அக்காலத்திலே ஆய்வு செய்து மெய்ப்பித்திருக்கிறார் சைவ சமயத்தின்  விஞ்ஞானி  திருமூலர்.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர்.

" அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன "

உலகம் உருண்டை வடிவமானது.என்று கலிலீயோ சொன்னது 16 ஆம் நூற்றாண்டில் அதற்கு 600 ஆண்டுகள் முன்பே தமிழன் சொல்லி விட்டான்.

பிரபஞ்சத்தில் நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

அணுவை பற்றிய தகவல்கள் :--

உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் நிரம்பியுள்ளது. நேர்மின் தன்மை கொண்ட புரோட்டான் அணுவின் மையத்தில் உள்ளது (1.0073 amu நிறை) எதிர்மின் தன்மை கொண்ட எலக்ட்ரான் மையத்தை சுற்றி சுழன்று வரும்.புரோட்டானுக்கு சமாமான மின்சக்தி கொண்டிருக்கும். புரோட்டானைவிட 2000 மடங்கு நிறை குறைந்தது (0.000549 amu). நியுட்ரான் ஒரு அணுவில் இல்லாமலும் இருக்கும் (நிறை 1.0087amu)

புரோட்டான்களின் எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண்.2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் 1 மில்லி மீட்டர் நீளம் இருக்கும்.கிரேக்க தத்துவஞானி டெமோகிரிடஸ் (DEMOCRITUS) கி.பி 470 ல் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய மூலக்கூறை அணு (atom) என்று கூறி ஆரம்பித்து வைத்தார். பிறகு 1800 வரை நிறுபிக்க படாத ஒன்றாக இருந்தது. டால்டன் (DOLTON) தான் அணுவின் பொருண்மை குறித்த அணுவியல் கோட்பாடுகளை 1808 ல் வெளியிட்டார்.

பின்வந்த ஸ்வீடிஷ் வேதியலார் ஜான் பெர்ஜிலியஸ் (Jons Berzelius) அணுவின் நிறையை நுண்ணியமாக கணக்கிட்டார். உதாரணமாக இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் சேர்ந்த கலவைதான் நீர் என நிறுபித்தார் H2O என்ற குறியீடையும் அளித்தார்.

140 ஆண்டுகள் கழித்து அணுவின் சக்தியை கண்டுபிடித்தார் அவோகாட்ரோ (AVOGADRO) ஆங்கிலத்தில் மாலிக்யூல் என்பது லத்தீன் வார்த்தை மாஸ் லிருந்து எடுத்தெழுதினார். மூலக்கூறின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை அறுதியிட்டு கணக்கிட்டார்.

22 லிட்டர் வாயுவில் 602 பில்லியன் டிரில்லியன் மாலிக்யூல்ஸ் உள்ளது. சுருக்கமாக இதை 6.02 x 1023 Mole-1 என்று எழுதினார். இதுவரை இந்த மாறிலி தான் அடிப்படை. அணு சக்தி : நியூட்ரான்கள் மூலம் அணுவின் உட்கருவை துளைக்கும் போது மேலும் நியூட்ரான்களை சிதறடித்து அவை அண்மை அணுக்களை துளைத்து தகர்க்க இந்த சங்கிலி ரியாக்சனில் அபரிமிதமான சக்தி வெளிப்படுவது.

ஐன்ஸ்டின் அணுவை யுரேனியத்தில் இருந்து பிரித்தெடுத்து அதிலிருந்து பெரும் சக்தி கிடைக்கும் என்ற கருத்தை அறிவித்தார். இவர் ஜெர்மன் நாட்டிலிருந்து உயிர் பிழைக்க அமெரிக்காவிற்கு தப்பினார். இவரை வைத்து அமெரிக்கா தயாரித்த அணு குண்டு ஹிரோஷிமாவின் அழிவுக்கு வித்திட்டது. இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் கற்பனை செய்யவில்லை.

அவர் இறப்பதற்கு(நவம்பர் 1954) ஐந்து மாதங்களுக்கு முன் அணு ஆயுதம் குறித்து “என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு” எழுதினார். இப்படி பின் விழைவைப் ஏற்படுத்திய அணுகுண்டை இனி எப்போதும் யாரும் பயன் படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.


அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam,)


தம்பிமாா்களே கத்தியை தீட்டும் அதேவேளை புத்தியையும் தீட்டுங்கள் என்று கூறிய ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும், தன்னிலும் பாா்க்க அரசியல் கூர்மை உள்ளவர்கள்   இவர்களை அரசியல் தளத்தில் விட்டால் தன் கதை எடுபடாது என்று சிந்தித்த வற்றிக்கானின் கைக் கூலிஅன்ரன் பாலசிங்கம் இந்தியாவின் கைக் கூலி என்று கூறி கொலை செய்வித்தான்.

அதே போன்றுசைவத் தலைவர்களையும், தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி இந்தியாவின் கைக் கூலி என்று கூறி கொலை செய்வித்தான்.வற்றிக்கானின் கைக் கூலிஅன்ரன் பாலசிங்கம்
 
ஆனால் ஈரோஸ் (ஏறோஷ்) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop இஶொப் ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றவர்களை கிறிஸ்தவ மேலான்மைக்காக அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார்கிறிஸ்தவ இடதுசாாியான ற்றிக்கானின் கைக் கூலிஅன்ரன் பாலசிங்கம். 

உறுதியுரை



                                                                நமசிவாய
                                                           
                                                             உறுதியுரை

1--
என் உயிருள்ள வரையில் என்  சிவபூமிதேசத்தில்  தமிழும் சைவமும் கலந்த  சைவத் தமிழ்த் தேசியத்திற்கும் தொண்டாற்றுவேன்.

2--
எக்காலத்திலும் எம்மிருப்பை (தமிழ்த் தேசியத்தை)அழிப்பதற்கான அன்னியர்களின்  தமிழின அழிப்புக்காக திணிக்கப்பட்ட கோட்பாடுகளான கிறிஸ்தவ, இஸ்ஸாமிய,கம்யூனீச,லெனிய,சோசலீச வளரச்சிகளுக்காக மதசாா்பின்மை பேசி  ஏற்று   எம்மிருப்பை (தமிழ்த் தேசியத்தை) அழிக்க நானே காரணமாக மாட்டேன்.

3-
என் தனிப்பட்ட நலன்களுக்காக எம்மிருப்பை காக்கும் எந்த நடவடிக்கைக்கும் இடையூறாக இருக்கமாட்டேன்.

4--
நாமிழந்த அடையாளங்களை (தமிழ்தேசியத்தை) உலகம் முழுதும் மீள்நிறுவ முழுமனதோடு செயலாற்றுவேன்.

5-
சைவசித்தாந்தம், சிவயோகசித்தாந்தம், திருக்குறளையும் அடிப்படை சித்தாந்தமாக ஏற்று செயல்படுவேன் என்றும்,  இங்கு நான் என்னை அடையாளப்படுத்தும் முழுப்பெயர் எனது தாய் தந்தையர் சூட்டிய பெயரே என்றும் சிவன்மீது ஆணையாக கூறி உறுதியேற்கிறேன்.

முழுப்பெயர்--------                                       கையொப்பம்----------------

தலைவர் பெயர்---------------                      தலைவர் கையொப்பம்-------

காரியதரிசி---------------                              காரியதரிசி கையொப்பம்----------

Tuesday 25 August 2020

ரகுமான் ஜான் .

இலங்கையில் முஸ்ஸீம்கள் தமிழ் தேசியத்திற்குள் அடங்கமாட்டாா்கள் என்று கூறி முஸ்லீம்களுக்காக முஸ்ஸீம் தேசியத்தை உருவாக்கியவர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்ஸீம் ஊர்காவலல் படைகள் மூலம் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களையும் வெளிநாட்டில் இருந்து இயக்கியவர்.உலகலாவிய இஸ்ஸாமிய பயங்கரவாதிகளையும் இலங்கை இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளையும் ஒருங்கினைத்து தமிழ்தேசிய அழிப்பில் ஈடுபட்டவர்.


ஆரம்பகாலத்தில் புலிகளுடன் இனைந்து கொண்டவர், பின்னாலில் புலிகளில் இருந்து பிாிந்து இடதுசாாி இயக்கமான  புளொட் உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்டவர். அதன் பிறகு புளொட்டில் இருந்து விலகி தீப்பொறியை உருவாக்கி பல சமூக விரோத செயல்களில் தமிழ் பிரதேசம் எங்கும் செயல்பட்டாா். தமிழர் கலாச்சார பண்பாட்டு அழிப்பில் ஈடுபட்டவர்.

விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு மீதான தாக்குதலை  இவரே நேரடியாக திட்டம் தீட்டி செயல்படுத்தியவர். ஆழ ஊடுருவிச் சென்று புலிகளை தாக்கும் திட்டங்களை நிறைவேற்றியவர்.
தீப்பொறி.


Monday 24 August 2020

றிஷாட்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பெண்களை பாலியல் விபச்சாரத்தில் ஊக்கப்படுத்தி அதன் ஊடாக தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு இஸ்ஸாமிய தேசியமயமாக்கிய இஸ்ஸாமிய குழுக்கள் இன்று வன்னி பிரதேசத்தில் பாலியல் விபச்சாரத்தில் ஊக்கப்படுத்தி அதன் ஊடாக தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழ் இன அழிப்பை மேற்கொள்வதற்காக ஒரு கும்பல்களையே உருவாகி உள்ளாா்கள் இதனை அறியாத முட்டாள் கூட்டங்கள் றிஷாட்டுடன் நிற்பதையே பெருமையாக கொள்ளுகினறாா்கள். நாளை இவர்களே விபச்சார கும்பல்களை உருவாக்கி தமிழ் இன அழிப்பு செய்வாா்கள். முள்ளம் தண்டு அற்ற இந்தப் பெண்களின் கணவன்மாா்கள் தங்கள் மணவியர்களை பெருமையாக நினைக்கின்றாா்கள்.

உணர்வோடு போராடியவனை துரோகியாகவும் தமிழ் இனத்தை அழிக்க துடிக்கும் இவன் போன்ற தீவிரவாதிகளை தியாகியாகவும் பாராளுமன்றம் அனுப்பிய பெருமை வன்னி மக்களை சேரும் வாழ்த்துக்கள்  .றிஷாட்டுக்கு வாக்களித்த வன்னி மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.பெளத்த ஏகாதிபத்தியம் பேசுகின்றவர்ளுக்கு நாளை வன்னி இஸ்ஸாமிய சேசியமாக மாறப்போகின்றது என்பது தெரியாதா?

தமிழ் பெண்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதன் ஊடாக தமிழ் இணத்தை அழித்து இஸ்ஸாமிய தேசியமாக மாற்றி அமைக்க முடியும் என்பதனை மூதூர் தொகுதியில் பெண்களை முஸ்லிம் எப்படியெல்லாம் சீரழிக்கின்றாா்கள் என்பதனை கவணியுங்கள். பெளத்த பேரினவாதத்தற்கு எதிராக போராடுன்ற தமிழர் அமைப்புகள் எங்கே?
https://www.youtube.com/watch?v=Z1egOuEb43s&feature=youtu.be

முல்லைத்தீவு கத்தோலிக்க அட்டூலியம். பாகம்--06


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ளது வேணாவில்  கிராமம். 

மொத்தம் 258 குடும்பம் இந்து குடும்பம் 248 கிறிஸ்தவ குடும்பம் 10  இந்துக் கோவில்-1 கிறிஸ்தவ சபைக் கூட்டங்கள்-4  வெறும் பத்து கிறிஸ்தவ குடும்பம் மட்டுமே உள்ள கிராமத்தில் 4 கிறிஸ்தவ சபைக் கூட்டங்கள் எதற்காக? 

நான்கு சபைக் கூட்டங்கள் வருமுன்னர் இக்கிராமம் முழுமையான சைவக் கிராமம். அப்படியிருக்கையில் இங்கு சபைக்கூடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது ஏன்? வழங்கியவர்கள் யார்?  உதவி வழங்குதல் என்ற பெயரில் அங்கு குடியேறியுள்ள கத்தோலிக்க மேரி றோசலின் என்ற  கிறிஸ்தவ பெண்மணி ஒருவர் அறநெறிப் பாடசாலை இடம்பெறும் நேரம் ஆலய பஜனை இடம்பெறும் நேரம் என மாணவர்களை அங்கு செல்லவிடாமல் பதிவு உறுதிப்படுத்தல் என அழைத்து குழப்பும் நடவடிக்கை தொடர்கிறது. 

அறநெறிப் பாடசாலை நேரத்தில் மாட்டிறைச்சி சாப்பாடு கொடுத்து மாணவர்களை அழைக்கிறார்.  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மக்கள் தொடர்ந்தும் அனைத்து அரச அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  கிராம அலுவலர் கிறிஸ்தவர். அவர் கிறிஸ்தவ ஆதரவு நிலையில் சைவ விரோத போக்கில் செயற்படுவதாக மக்கள் விசனப் படுகின்றனர்.  பிரதேச செயலாளருக்கு முறையிட்டனர்.அவர் மக்களுடன் கலந்துரையாடினார். குறித்த கிறிஸ்தவ பெண்மணியை அழைத்து குறித்த முறைகேட்டை நிறுத்தப் பணித்தார்.

பிரதேச செயலாளருக்கு எமது மனமார்ந்த நன்றிகள். அவருக்கு என்றும் சிவனருள் கிட்டும்.  ஆனால் அந்த கிறிஸ்தவ பெண்மணி தன் செயலை தொடர்ந்தும் செய்கின்றார்.  அவர் பிரதேச செயலருக்கே மிரட்டும் வகையில் சவால் விடுகின்றாரா? அவரை பின்புலத்தில் இருந்து இயங்கும் சக்தி எது? இயங்குவது யார்?  இதனை முடிவிற்கு கொண்டு வர மக்கள் நாம் என்ன செய்ய போகின்றோம்.  மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் ஆகியோர் அனுமதியின்றி அமைக்கப்பட்ட சபைக்கூடங்களை இல்லாமல் செய்ய உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இது வெறும் மதம் சார்ந்த பிரச்சனை அல்ல.  இது சமூகத்தை துண்டாடும், சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி அமைதியின்மையை ஏற்படுத்தும்.  

எதிர்கால சந்ததி வன்முறையற்ற அமைதியான சூழலில் வாழ உடன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பில்.

Sunday 23 August 2020

கடற்படை தளபதியை காப்பாற்றிய சுமத்திரன்.

ஸ்ரீலங்கா கடற்படை தளபதியை காப்பாற்றிய சட்டத்தரணியை தான் எம். ஏ சுமந்திரன் ஜெனீவா அழைத்துச் சென்றாரென தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் பதிவு செய்யப்படவில்லையெனவும் கட்சிக்கான ஒரு யாப்பினையோ, தலைவருக்கான அதிகாரங்களையோ வைத்திருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களை எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றிலேயே அவர் தெரிவித்தார்.

இது குறித்தும், கட்சியின் கடந்த கால செயற்பாடுகள், எதிர்கால நிலைப்பாடுகள் தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பே இது,
https://www.youtube.com/watch?v=WaZXGPQrAzo&feature=emb_title

Friday 21 August 2020

தமிழ்தேசியத்தின் கொடி

                                                         திருச்சிற்றம்பலம்.

                       
தமிழ்தேசியத்தின்  நந்திக் கொடி.
சைவ வாழ்வியல் நெறிகளையும், தமிழையும் அருளிய சிவன் அருளியதே நந்நிக் கொடியாகும். இமய மலையிலிருந்து தமிழ் தரனி ஆண்டகாலம் தொடக்கம் இன்றுவரை உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்பில் பறந்து கொண்டு இருப்பது நந்நிக் கொடியாகும்.

நந்நிக் கொடி அரசியலையும் கடந்து தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை அடையாளப்படுத்தும் கொடியாகும். காலத்தால் அளக்கவும் அளவிட முடியாத காலம் தொட்டு தமிழ்தேசியத்தின் பண்பாட்டு கொடி ஆகும்.

பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய நந்திக் கொடி, சிவபூமியின் தேசத்தின் நந்திக் கொடி,யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி, சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி அத்துடன் அரச முத்திரை.

அத்துடன் சிவயோக சித்தாந்தமான சிவயோக கலையின் முக்கியமான முத்திரையும், இரத்தக்கரை படியாத புணிதமானது நந்திக் கொடி ஆகும். நந்திக் கொடியை அவமதிப்பது சிவகுற்றமாகும்.
திருச்சிற்றம்பலம்.                                     .

வடவாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்


ஆலமரத்தின் கீழமர்ந்திருக்கும்    தட்சிணாமூர்த்தி   என்ற சிவபெருமானின் வடிவமே  ஞானத்தைக் கூறிப்பதாகும். தட்சிணாமூர்த்தியின்  திருக்கரத்திலுள்ள நூல் சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கியதாகத். திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.
திருக்கரத்தில் உருத்திராட்ச மாலை 36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துகிறது.இடக்கரத்தில் அமிர்தகலசம்   கொண்டிப்பது _
அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றலைக்  குறிக்கிறது.

ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.
புலித்தோல்  மீதமர்தல் தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றலைக் குறிக்கிறது. காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.

 முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் ( சிவபெருமான்)அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுகிறார். ஞான சூத்திரம், ஞானச் சுருக்கம், ஞான பஞ்சாட்சரம் என பல நூல்களை தட்சணாமூர்த்தி   அருளியுள்ளார்.

ஞான தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, இராஜ தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி என்று தட்சிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன.

 பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் என்ற நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினர் நால்வரும். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை புரிந்துகொள்ள யோகநிலையில் இருந்துகாட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர்.

யோக தட்சிணாமூர்த்தி 🙏

 சாம வேதத்தினை வீணையில் இசைத்திட விரும்பிய நாரத முனிவரும், சுக்ர முனிவர்களும் சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இசை ஞானத்தினையும், சாம வேதத்தின் இசையையும் அவர்களுக்குக் கற்பித்தார். வீணையை உருவாக்குவது பற்றியும், அதனை முறையாக இசைப்பது பற்றியும் வீணா தட்சிணா மூர்த்தியாகிய சிவபெருமான் எடுத்துரைத்தார்.

தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும் (அடிப்படை) ,  அவற்றின் பொருளாகும்.

தட்சிணாமூர்த்தியை 'தென் திசை கடவுள்'  என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.

படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்கள் எனப்படும் சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.

இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று,  பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்பித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.

தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு  வடவாலின்  கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் முயலகன்  என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமை   என்ற இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும்  ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லும்  ஓலைச்சுவடியும் வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

"கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்".🙏 (திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)
விளக்கம்:

கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கடலாகியப்  பகையை வெல்லலாம் என்பதே இதன் பொருள்.

அதாவது கல்லால மரம்,  வட + ஆல்= வடவால்   என்பதெல்லாம் ஆலமரத்தைக் குறிக்கிறது. வட  என்றால் ஆலமரம் . ஆலமரத்தின் கீழிருந்து   சனகாதி முனிவர்களுக்குச்  சிவபெருமான், ரிக்,யஜுர், சாமம்,   அதர்வணம் என்ற நான்மறைகளையும்  போதித்தார்.  " வட என்ற ஆலமரத்தின் கீழிருந்து   சிவபெருமான்  போதித்த மொழி  என்பதால்    சமஸ்கிருதம்,   "வடமொழி" என்றானது.   ஆனால்   வேண்டுமென்றே பிரிவினை வாதம் பேசுவோர், சமஸ்கிருதம் ஆரிய மொழி  என்றும் வடக்கே பேசுவதால்   வடமொழி எனவும் திரித்துப்பொருள் எடுக்கின்றனர். இது  அறியாமையின் செயல்.  சிவபெருமான்  உடுக்கை   அடிக்க அதன் ஒரு புறம் இருந்து தமிழும், மறுபுறம் இருந்து சமஸ்கிருதமும் தோன்றின என்பர்.
 
சமஸ்கிருதம்  🙏

தமிழும், சமஸ்கிருதமும்  ஒரே நேரத்தில்   சிவபெருமானால்  தோற்றுவிக்கப்பட்ட  மொழிகளே.வடக்கே பேசியதால்   வடமொழி எனப் பெயர் வந்தது  என்றால், தெற்கே பேசியது  தென்மொழி என ஆகியிருக்க வேண்டுமே?  ஏன் தமிழுக்குத்  தென் மொழி, தென்னகத்தோர் பேசுவது என    யாருமே கூறவில்லை.  ஆனால்  'வட என்ற ஆலமரத்தின் கீழிருந்து  மறையோதும் எங்கள் பரமன்'  எனக்  கூறியது  உமையம்மையிடம்  ஞானப்பாலுண்ட  திருஞானசம்பந்தர்   பெருமான்  கூறியிருக்கிறார்.

 "கோளறு  பதிகத்தில்  இதை   அழகாகப்  பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.
"மதிநுதன் மங்கையோடு வடவாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் கொதியுறுகாலன் அங்கி நமனொடு தூதர் கொடுநோய்களான பலவும்  அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே" ஞானசம்பந்தர்.

* "வடவால் இருந்து மறையோதும் பரமன்"வட= ஆலமரம்  வட ஆல்
வட என்றாலே ஆலமரம் தான். எனவே  அறிவாளி   மகான்களே!   சிவபெருமான் பேசியதே   தமிழ்மொழி மட்டுமே  சமஸ்கிருதம்  வடக்கேயுள்ள மொழி என்றெல்லாம் பிதற்றி திரிய வேண்டாம்.
  
ஷ,  ஸ, ஜ,  ஹ. க்ஷ   என்ற எழுத்துக்கள் எல்லாம்    சமஸ்கிருத எழுத்துக்களின் தமிழ் வரிவடிவங்களே.  சமஸ்கிருதத்தில் இவ்வறின் வரிவடிவம்  வேறு.   அந்தணர்களும் தமிழர்களே.  தமிழை வளர்ந்தவர்களில்  அந்தணர்களின்  பங்கு  மிகப் பெரிது.  தமிழை  முறையாக, அக்கறையாகக் கற்றவர்களுக்கு இந்த உண்மை   தெரியும்.

உ.வே. சாமிநாத ஐயர்  அவர்கள்  இல்லையென்றால்   தமிழில்  இன்றிருக்கும் பெரும்பாலான  அரிய பொக்கிஷங்கள்   இல்லாமலேயே போயிருக்கும்.   பாரதியாரை விடச்  சிறந்தத்  தமிழரும் உண்டோ?   தமிழ்ப்  பற்றை காட்டுகிறேன்  பேர்வழி என  "விஷயம்"    என்ற  சொல்லை  "விடயம்" என எழுதுவது  ஒரு  மொழியைக்  கொடுமைப்படுத்துவதாகும்.  சைவர்களாக இருப்போா் இருப்போர்    அவசியம்  சமஸ்கிருதத்தைப் படிக்கவேண்டும்.

அரிய பல விஞ்ஞானகருத்துக்கள் அடங்கிய  பொக்கிஷங்கள் மற்றும்  நான் மறைகள்  அதிலேயே உள்ளன.     நாற்பது விதமான விமானங்களை வடிவமைப்பதைப் பற்றி  "வைமானிக   சாஸ்திரா"  என்ற நூலைப்  பரத்வாஜ முனிவர்    சமஸ்கிருதத்தில் இயற்றியுள்ளார். நமது சமஸ்கிருத  வெறுப்பால்  நம் முன்னோர்களின்அரிய பொக்கிஷங்களை நாம் இழந்துவருகிறோம்.
முதல்  விமான   கண்பிடிப்பு:

 ரைட் சகோதரருக்கு ஐந்து வருடம் முன்னால் அதாவது 1898 ஆம் வருடம் ஆகாய விமானத்தை உருவாக்கிப் பறக்க விட்டவர் நம் பாரத நாட்டவரே.
மும்பை மாநகரில் ஷிவ்கர் பாபுஜி தல்பாடே SHIVKAR BAABUJI THALPADE என்கிற ஒரு மராட்டியப் பிராமணர். சம்ஸ்கிருத அறிஞர். மும்பைப் பல்கலையில் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றியவர். சமஸ்கிருத மொழியில் இருந்த விஞ்ஞானப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்வதில் தணியாத ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடன் பணியாற்றிய ஒரு நண்பர் படம் வரைவாளர் DRAUGHTSMAN உதவியுடன் மஹரிஷி பாரத்வாஜ முனிவரின் VAIMAANIKA SASTRA வைமானிக சாஸ்திரா என்னும் நூலை ஆராய்ச்சி செய்தார். அதில் விமானங்கள் வடிவமைப்பு, கட்டுமானம், பறக்க வைப்பது, எரிபொருள், விமானங்களின் விசைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற எல்லா விஷயங்களும் உள்ளன. அதன் மூலம் விமானம் தயாரிக்க மிகுந்த ஆர்வம் கொண்ட தல்பாடே அதற்கு பரோடா மன்னரின் ஆதரவும் நிதி உதவியும் பெற்றார். பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் அவர் ஒரு விமானத்தை வடிவமைத்தார்.

   1898 ஆம் ஆண்டு அதாவது ரைட் சகோதர்களுக்கு ஐந்தாண்டு முன்னரே தல்பாடே மும்பை சவுபாத்தி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தன விமானத்தின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்தினார். அது பிரபல சுதந்திர போராட்ட வீரர் கோவிந்த ரானடே, பரோடா அரசர் மற்றும் பல பிரபல மனிதர்களின் முன்னிலையில். அது  நிகழ்ந்தது.
  
🙏சிவபெருமான்  ஒரே நேரத்தில்  உருவாக்கியதே   தமிழும்,   சமஸ்கிருதமும்.   இல்விரண்டு  மொழிகளுக்கிடையேயும்      சிவபெருமானே  வேறுபாடு  காட்டாதப்போது,   சமஸ்கிருதத்தைப் பழிக்க நாம் யார்?

சிவபெருமான்   உருவாக்கிய   சமஸ்கிருதத்தைப் பழிப்பது   அவரையே பழிப்பதற்கு ஒப்பாகும். வடவாலிருந்து மறையோதும்  எங்கள் பரமன்  புகழ் ஓங்குக.🙏🙏🙏

Thursday 20 August 2020

அன்னிய தேசியம்

அரேபிய ஏபிரகாமிய கிறிஸ்தவ பண்பாடுகள் கிறிஸ்தவ நாடுகளுக்கும்,அரேபிய தேசங்களுக்கும் உரியவையாகும். அரேபிய ஏபிரகாமிய கிறிஸ்தவ பண்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள்
தமிழ் தேசியத்தின் கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர்.

அரேபிய ஏபிரகாமிய இஸ்ஸாமிய பண்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள் அரேபிய பண்பாட்டிற்குள் அடங்குவாா்கள்.அரேபிய தேசங்களுக்கும் உரியவையாகும். இஸ்ஸாமிய பண்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள்தமிழ் தேசியத்தின் கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர்.

தெய்வீக தமிழ் போற்றிய வாழ்வியல் நெறிகளை நிராகரித்து அன்னி கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்டவர்கள் அன்னிய தேசிய கோட்பாட்டுக்கு உரியவை ஆகும்.தமிழ் தேசியத்தின் கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர்.

பைபில்,குரான்,கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் போன்ற
அன்னிய சித்தாந்த தேசிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களை தமிழ் தேசியமாக நிறுவிக்கொள்ள தமிழ் ,தமிழா், நாம் தமிழர், தமிழ் தேசியம், தமிழா் தேசத்தை தமிழா்தான் ஆழவேண்டும் என்றும்  சற்று உரக்க கூவ வேண்டியுள்ளது.




கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக கொண்டவர்களின் தேசியம் "குழப்பவாத தேசியம்".

தமிழ்தேசியம். பகுதி----1

ஐவகை நிலத்திணைகளின் தமிழ் தேசியத்தின் தெய்வீக வழிபாட்டு பண்பாடுகள்.

சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. 

ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ள நிலத்திணைகளின் தெய்வங்களின் பண்பாடுகள் தமிழ் தேசியத்தில் இருந்து பிரிக்க முடியாத தெய்வீக வழிபாட்டுடன் கூடிய பண்பாடுகளாவே பின்னி பினைந்தே காணப்படுகின்றது.

 'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே'

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி.  குறிஞ்சியின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள் 'சேயோன்' (முருகன்) மூலமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

காடும் காடு சார்ந்த முல்லை.  முல்லையின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள் மாயோன் (திருமால்) மூலமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருதத்தின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள்  இந்திரன் மூலமாக அடையாளப் படுத்தப்படுகின்றது.

கடலும் கடல் சார்ந்த நிலமே நெய்தல். நெய்தலின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள்  வருணன் மூலமாக அடையாளப் படுத்தப்படுகின்றது.

முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போன நிலமே பாலை. பாலையின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள் கொற்றவை அம்மனின் மூலமாக அடையாளப் படுத்தப்படுகின்றது.

ஆகவே தமிழ்தேசியம் தெய்வீக தமிழ் போற்றிய பண்பாடுகளின் ஊடாகவே அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றது.


தமிழ் தேசியம் பாகம்----6

 தமிழ் தேசியத்தின் பஞ்ச பூத பண்பாட்டு வழிபாடு.

"நீர்"  வழிபாட்டு பண்பாடு.
பாகம்---1

தமிழ் தேசியத்தின்  பண்பாடுகள் தமிழர்களின் பண்பாடே அதில் பஞ்சத பூத  வழிபாட்டு பண்பாடுகளில் ஒன்றான  நீர் வழிபாட்டு பண்பாடு  தமிழ் தேசியத்தின் பண்பாட்டில் அடங்கும்.

நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த   "பஞ்சபூத"   மயக்கம் உலகம் என்கிறது தொல்காப்பியம். 'நீரின்றி அமையாது உலகு', நீர் 'மிகுனும் குறையினும் நோய் செய்யும்' என்கிறார் வள்ளுவர். நீரில்லாமல் இவ்வுலகம் இல்லை என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். வழிபாடாக போற்றி வணங்கி வந்திருக்கின்றாா்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று இது.

தமிழரின் நீர் மேலாண்மை திறன் மிக தொன்மையானது. சங்ககாலம் தொட்டு நீரை கொண்டாடி இருக்கிறார்கள், அதை பாதுகாத்து இருக்கிறார்கள். சங்க காலத்தின் முந்நீர் விழவு என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். தமிழர் பண்பாட்டை நீர் பண்பாடு

அகழி, அசும்பு, அலந்தை, ஆவி, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊரணி, எல்வை, ஏல்வை, ஏம்பல், ஏந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கயம், கால், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை,குட்டம், குண்டு, குண்டம், குண்டகம், குழி, குளம், கூவல், கூபம், கேணி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூழி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கல், மடு, மடுவு, மூழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி - இவை அனைத்தும் சங்க காலம் முதல் தற்காலம் வரை நீர் நிலைகளை குறிப்பிடும் சில பெயர்கள்.நீர் நிலையை குறிக்க, இத்தனை பெயர்கள் இருப்பதே தமிழர்கள் வாழ்வு நீரோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்றுஒரு சமூகம், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினால் மட்டுமே அதனை சுட்டும் இத்தனை பெயர்கள் இருக்க முடியும்.

"குளம் (குளம் தொட்டு). கலிங்கு (கோடு பதித்து), வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல் (வழி சித்து), பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆயக்கட்டு பகுதிகளை உருவாக்குதல்  (உழுவயலாக்கி) பொதுக்கிணறு அமைத்தல் (கிணறு).ஒரு ஏரியை இந்த ஐந்து அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்துக்கு செல்லுவான்," இதுதான் பாடலின் பொருள்.

தற்போது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை இணைத்து பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உலகெங்கும் பரவி வருகிறது. இந்த சிறந்த நீர்மேலாண்மை உத்தி, சங்கம் மருவிய காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த தேசம் எங்கும் இருந்திருக்கின்றது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
இது தமிழர் வாழ்வில் நீர் மேலாண்மை எவ்வாறு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று.

"ஏரிகள் பன்முகத் தேவைகளை நிறைவுச் செய்யும் ஒரு களஞ்சியம். அதுவொரு மீன் வளர்ப்புப்பண்ணை, மழைநீர் சேமிப்புக் குட்டை, வண்டல் தரும் உரவங்கி, கரப்பு நீர் மேம்பட உதவும் ஊற்றுக்கால், சுற்றுச்சூழலைப் பசுமையாக குளுமையாக மாற்றி வெப்பம் குறைக்கும் இயற்கைக் குளிர் சாதனம். இறுதியில் அதுவொரு பாசனக்குளம்."

தமிழ் தேசியத்தின்  பண்பாடுகள் தமிழர்களின் பண்பாடே அதில் பஞ்சத பூத  வழிபாட்டு பண்பாடுகளில் ஒன்றான  நீர் வழிபாட்டு பண்பாடு  தமிழ் தேசியத்தின் பண்பாட்டில் அடங்கும்.

Wednesday 19 August 2020

தமிழ்தேசியம். பகுதி----6

சைவ ஆலயங்கள்

எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலாச்சார பண்பாட்டின் பிரதிபலிப்பாக எம் கண்முன்னே ஆதாரங்களாக  சைவ ஆலயங்களாக தமிழ் தேசியம்  எழுந்து நிற்கின்றன.  சைவ ஆலயங்கள்  இலங்கை முழுவதும்  தமிழ் தேசியம்  பரந்து எழுந்து நிற்கின்றன. என்பதற்கு ஆதாரங்களாக சைவ ஆலயங்கள் இருக்கின்றன.

வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் கலாச்சார பண்பாட்டுஅறவியலுக்கும் இல்லாத பெருமை சைவ தமிழ் தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும் சைவ தமிழுக்கும், சைவ தமிழருக்கும் தமிழர் தேசத்திற்கு உண்டு.

தமிழ்தேசியத்தின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கிறது என்று தானே அர்த்தம்.

 பண்பட்ட மண்ணில்தான் செடிகளும் கொடிகளும் துளிர்விடும். அதுபோல இந்தச் சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் தமிழ் தேசியத்தின் சைவ பண்பாட்டை கட்டிக் காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். இது வரலாற்றுப் பதிவு.

இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இணையம் வரைக்கும் தமிழ்தேசியத்தின் சைவ  பண்பாடும் பதிவுகள் தன்னைக் காட்சிப்படுத்தி நிற்கிறது. நாகரீகம் என்ற பெயரில் தலைமுறை கடந்து விட்டாலும் தமிழ்தேசியத்தின் சைவ பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து வருகிறது.

தமிழ்தேசியத்தின் சைவ  உயரிய குணங்கள் கொண்டுள்ள ஒரே மாந்தரினம் இன்று கிறிஸ்தவ,இஸ்ஸாமிய, திராவிட நாத்திக, சோசலிச ,மார்க்சிச , லெனினிய வாதிகள் போன்ற சாக்கடையில் சரணடைந்துள்ளது மனவருத்தமாக உள்ளது. மற்ற இனங்கள் காட்டுமிராண்டியாக இருந்தபோதே சங்கம் வைத்து மொழிவளர்த்த உன்னதமான சமூகம் தமிழ்ச்சமூகம் சைவ தமிழ்தேசியத்தின் ஊடாகவே தன்னை அடையாளப்படுத்தியது.

Tuesday 18 August 2020

தமிழ்தேசியம். பகுதி------07

வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் கலாச்சார பண்பாட்டுஅறவியலுக்கும் இல்லாத பெருமை தமிழ் தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழர் தேசத்திற்கு உண்டு.

தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளில் முக்கியமானது  சைவ வாழ்வியல் நெறிகளை கொண்ட கலாச்சாரம்,  பண்பாடு, சைவ நாகரிகம் ஆகும். தமிழ் தேசியத்தின் சைவ கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, ஆய கலைகள் அறுபத்து நான்கி என கூர்ந்து, அகன்று, ஆழ்ந்து செல்லுகின்றது.

மேலும்  சங்ககால இலக்கியங்கள் ஊடாக விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, அறுசுவை உணவுகள் , சைவ  பண்பாடு ஆடைகள்,  சைவ  பண்பாடு கொண்டாட்டங்கள்,  சைவ வாழ்வியல் தத்துவம், சைவ சமய நெறிகள் வழிபாடுகள் மரபுகள், சைவ சமய சடங்குகள், நிறுவனங்கள், ஞானிகளின் அறிவியலை  சங்ககால  இலக்கியங்கள் ஊடாகவும், அரசியல் திருக்குறள், இலக்கியங்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

மற்றும் பண்டைய தமிழர்களின் தொழில்நுட்பம். தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டது தமிழ்தேசியம்.சைவ சமயத்துக்குத் தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு. அத்தகைய தொடர்புகள் தமிழ் தேசியத்துடன் என்றும்  பிரிக்க முடியாதவாறு கலந்தே காணப்படுகின்றது.

" தமிழ் தேசியத்தின் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."

https://www.youtube.com/watch?v=MjPxawDQDd4

https://www.youtube.com/watch?v=NFdhtqP8Vj4

தமிழ் தேசியம் பாகம்--4

தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளின் ஒன்றான  தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள்.நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்.

மொழி என்பது ஒரு தேசியத்தின் கலாச்சார அடையாளம், அதுபோல ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

தமிழன் என்று அடையாளப்படுத்துவதற்கு தமிழ் தேசியத்தின் ஊடாக பல அடையாளங்கள் இருக்கின்றன. யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று அமுதத் தமிழ்  இருக்கின்றது என்றால் அது, நாம் நமக்கு வைத்துக் கொள்ளும் தமிழ் பெயரே தமிழன் என்று அடையாளப் படுத்தும். அந்நிய மொழி தேசிய அடையாள பெயர்கள் மூலம் அடையாளப்படுத்தப்படும் பெயர்கள் என்றும் தமிழன் என்று அடையாளப்படுத்தப்படமாட்டாது.

தமிழ் தேசியதின் ஊடான தமிழ் பெயர் என்பது எழுத்து வடிவம், உச்சரிக்க மட்டுமல்ல உடலுக்குள் உயிர் போல நம் தேசியத்தின்வாழ்வோடு இணைந்திருப்பதுமாகும். தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்தும் பெயர்கள் சாதாரணமானவை அல்ல தரணி ஆண்ட தமிழ், மரணத்தை வென்று கொடுத்த தமிழ், ஞாணிகலின் நாவில் நந்தணம் ஆடிய தமிழ் சூட்டாமல்  பிறமொழிகளை பெயா்களை சூட்டுவது என்பது தமிழை கொலை செய்வதற்கு சமமானதாகும்..

ஒருவரை நேரில் பார்த்தவுடன் இவர் தமிழர் என்று தெரிந்தும் பெயரைக் கேட்டால் பிற தேசியத்தின் மொழி இனத்தவர் பெயரை தாங்கி தமிழ் இன அடையாளத்தை அழித்தவராக இருப்பாா்.பிறமொழி இனத்தவா்கள் தங்களை   மறந்தும் தமிழ் பெயர்களை பிற மொழியினர் தங்களுக்குள் சூட்டிக் கொள்வதில்லை.

தன்மாணம் இழந்து ,சூடு சொறணை அற்று நித்திரையில் இருக்கும் கிழங்கு தமிழா  உன் சந்ததியினருக்கு  நீய் சூட்டுவது ஆண்பால்,பெண்பால் அறிய முடியாத பிறமொழி பெயா்கள்.நீய்  உன் தமிழ் குலத்தின் இன அடையாளத்தை இழிவு படுத்துகின்றாய். ஆனால் தமிழன், தமிழீழம் என்று எல்லாம் கூவித்திாிகின்றாய்.

அரேபியமொழி மோகத்தால் அரேபிய பெயா்களும்,  பறங்கியின் மோகத்தால் பறங்கியின் பெயா்களும், ஆப்பிரிக்கா மோகத்தால் ஆப்பிரிக்கா பெயா்களும்   தமிழனிடம் இருந்து  ஆழ ஊடுருவி செல்வதற்கு காரணம் சைவமும் தமிழழும் கலந்த தமிழ் உணா்வற்ற சந்ததியின்  விருத்திதான் என்று சொன்னால் மிகையாகாது.


எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.

அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.


அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.

தூஷப்கை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷப்த்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷப்கை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷப்கா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.

வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.

https://www.youtube.com/watch?v=MjPxawDQDd4

https://www.youtube.com/watch?v=NFdhtqP8Vj4

தமிழ்மொழி இயக்கும் ஏழு ஆற்றல் சக்கரங்கள்--.


தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு. இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி இயங்குகிறது என்பதை சித்தர்கள் கணித்துள்ளனர்.

ஆ முதல் ஒள வரை உள்ள ஓசைகள் உடலின் முக்கிய ஏழு நரம்பு மண்டலங்களை இயக்கவல்லது. இந்த ஏழு நரம்பு மண்டலங்களை  சக்கரங்கள் என்றும் கூறுவர்.

இவ்வோசைகளை நாம் ஒலிக்கும் போது இந்த சக்கரங்கள் சுழல்கிறது. உயிர் ஒலியாகப்பட்டது ( வாயு) காற்றின் மூலமாக இந்த சக்கரங்களை இயக்குகிறது.இவைகள் இசையாகவும் பரிமானம் பெறுகிறது . ஏழிசையும் இங்கிருந்தே பிறக்கிறது.

தாளமும் பண்ணும் சேர்ந்தது தான் இசை. இந்த இசை இயற்கையில் உள்ளது. நம் உடலிலும் உள்ளது. நம் உடலில் எங்கிருந்து இது பிறக்கிறது என்பதை அறிந்த சித்தர்கள், அந்த இயற்கை இசையின் ஊடாக தமிழ் உயிர் எழுத்துக்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். ஆதலினாலே தமிழே உலகின் முதல் மொழியாகவும் ஆயிற்று உயிரும் மெய்யும் கூடும் கலைக்கே சிவயோக சித்தாந்தம் உடலும் மெய்யும் சேர்ந்தே இருந்தாலும் உயிரை தனியே நாம் உணர முடியாது.உயிருக்கும் உடலுக்கும் இருக்கும் தொடர்பை இந்த உயிரெழுத்து சிவயோக சித்தாந்தம்  மூலமாக நாம் அறியலாம்.

அவ்வாறு நாம் அறியும்போது உயிரை யும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை நாம் தெரிந்து கொள்ளலாம் . அதற்காகத் தான் இந்த சிவயோக சித்தாந்தத்தை சித்தர்கள் வகுத்தனர் .தினமும் காலை மாலையில் நாம் இந்த சிவயோக சித்தாந்தத்தை  செய்து பழகி வந்தால், நம் உடலும் உயிரும் புத்துணர்வு பெறுவதை அறியலாம்.

முதலில் ‘ஆ’ என்ற ஓசையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்து ஒலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆ என்பதை ஆ ..ஆ.. ஆ ..ஆ ..ஆ ..ஆ
சுமார் 20 – 30 நொடிகள் வரை நாம் இழுக்கலாம் . அப்போது நம் மண்டையின் மேல் நடுப்பகுதி (துரியம்) இயங்குவதை நாம் அறியலாம். இந்த இடத்தில் தான் அகரத்தின் ஓசை செயல்படுகிறது. இதுவே உடலின் முதல் பகுதியுமாகும்.

பின்பு ‘ஈ’ என்ற ஓசையை எவ்வளவு நீடித்து ஒலிக்க முடியுமோ அவ்வளவு நீளம் ஒலிக்க வேண்டு ம். இது நம் மூக்கு, நெற்றிப்பகுதியில் உள்ள தசைகளை, நரம்புகளை (ஆக்கினை) இயக்குவதை அறியலாம் . அடுத்து ‘ஊ என்ற ஒலி. இது நம் தொண்டை பகுதியை (விசுத்தி) இயக்கும். இவ்வாறு இந்த உயிர் எழுத்துக்களின் ஏழு ஓசைக ளை ஒலிப்பதின் மூலமாக உடலின் ஏழு சக்கரங்களையும் நாம் இயக்கலாம்.

இது சித்தர்கள் உலகிற்கு கொடுத்த மிகத்தொன்மையான சிவயோக சித்தாந்த பயிற்சி யாகும். நாம் தினமும் காலை மாலை உடற்பயிற்சி முடிந்தவுடன் இந்த உயிர் வளர்க்கலையை பயின்று வந்தால், நம் உடலும் உயிரும் புத்துணர்வு பெறும். நம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் சிறப்பாக செயல்படத் தொடங்கும். எப்போதும் நாம் புத்துணர்வுடன் இருப்பதை உணரலாம். இதை உலகிற்கு கொடுத்த சித்தர்களுக்கும் நாம் நன்றி பகிர்வோம் .

-உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ்  மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு  நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு  360(15*24) மூச்சு  சித்தர்களால்  வகுக்கப்பட்டுள்ளது.  (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள்  வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.

.மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே! 1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத் துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

தமிழின் முதல் எழுத்து  "அ" என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதில் உள்ள ரகசியம் தெரியுமா?.."அ" - என்ற எழுத்து வடிவம் 4காக பிறித்து பார்த்தால் இது எளிதில் விளங்கும். . . முதல் பகுதி மேல் உள்ள வட்டம் ** இரண்டாம் பாகம் வட்டத்தோடு சேர்ந்த பிறை வடிவம் *** மூன்றவது அடி கோடு *** நான்காவது பகுதி நேர்கோடு *** இந்த வடிவங்களை சாராத எழுத்துக்கள் உலகில் எந்த மொழிகளிலும் இல்லை.

என்ன வியப்பாக உள்ளதா?!! தமிழில் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். தமிழில் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படிச் சாத்தியமாகும் என்பதைக் காண்போம். கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி. இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:- உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.

மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே... 1 நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால், உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

 தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வாழ்க்கை மொழி ஆகவே, தமிழ் மொழியை வாழும் மொழியாகப் பார்த்துக் கொண்டால், நம்மை விட்டு போகாமல் காத்துக் கொண்டால், அதுவே போதுமானது. அப்போது தமிழ் வாழும். தமிழர்களும் வாழ்வார்கள்…. தமிழ் என்றும் இருக்கும்.

ஆயுத எழத்து
ஆயத எழத்துக்களான ஃ, அங், அம் ஆகிய மூன்றுமே எழத்துக்களுக்கு மூலமாதலால் மூல எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின் றது. இந்த அக்(ஃ)ம் அம்மும் சேர்ந்தே அகமான உள் உருவாகின்றது. அக்(ஃ)ம் அங்கும் சேர்ந்தே மாயையான வெளி உருவாகின்றது. அங்கும் அம்மும் சேர்ந்து அங்கம் உருவாக காரணமாக அமைகின்றது. அக்(ஃ)+அம்=அகம்(உள்) அக்(ஃ)+அங்=அகங்(மாயை-வெளி) அங்+அம்=அங்கம் ஆயுத எழுத்து ஃ, இதன் உச்சரிப்பு அக்கனா ஆகும். இதன் முதல் புள்ளி "ம்" என்ற பரத்தை குறிக்கும். இரண்டாவது புள்ளி "வ்" என்ற பஞ்சபூத உற்பத்தி ஸ்தானமாகும். மூன்றாவது புள்ளி "உ" என்ற ஆகாயத்தின் எழுத்தாகும். இவ்வாறே மூல எழுத்தாக ஆயுத எழுத்து "ஃ" தோன்றியது. இவற்றின் ஆயுத எழுத்தான 'ஃ' என்பதின் பொருள் கற்பித்தல் ஆகும். இதனுடைய சிறப்பு என்னவெனில் அக்காலத்தில் 'வடக்கிருந்தல்' என்ற நிகழ்வு உண்டு. அதாவது வயது முதிர்ந்தோர் மற்றும் பக்தியினாலோ தன் வீட்டை விட்டு வெளியேறி வடக்கேயிருக்கும் ஏதாவது ஒரு ஸ்தலத்தை நோக்கி நடந்து சென்று அத்தலத்திலேயே தங்கி உடலை வருத்தி தன் உடலை விட்டுவிடுவர். பக்குவமடைந்த சிலர் அன்ன ஆகார நீரின்றி தொடர்ந்து ஃ(அக்கனா) என்று திரும்ப திரும்ப உச்சரித்து உயிரை விடுவர். அதற்குப் பெயரே வடக்கிருத்தல் எனப்படும். அதாவது ஃ (அக்கனா) என்று தொடர்ந்து மூன்று மணி நேரம் உச்சரித்தாலே உடலைவிட்டு உயிர் நீங்கிவிடும். இதை குறைந்த அளவு உச்சரித்தால் இரத்த அழுத்தம் குறையும். சித்தர்களுக்கு சேவை செய்யும் சீடர்கள் வாழ்க்கை போதும் என்று நினைத்தால் அக்கனா அக்கனா என மூன்று மணி நேரம் உச்சரித்து உடலைவிடுவர். சிலர் சமாதியடையும் முன்பும் இந்த எழுத்தை உச்சரித்து சமாதி அடைவர். மேலும் இந்த ஆயுத எழுத்தான அஃகனாவை உச்சரித்து உயிர்நீத்தார் யாவரும் அடுத்த பிறவியில் மனித பிறப்பாகவே பிறந்து அதுவும் ஒரு அவதாரமாகவோ அல்லது ஞானியாகவோ அவதரிப்பர் என்பது இதன் சிறப்பு ஆகும். எனவே தான் இதை முதன்மை எழுத்து என்றும் புனித எழுத்து என்றும் அழைக்கப்படுகின்றது. வள்ளலார் தனது அகவலில் இந்த எழுத்தை திருநிலை என்று குறிப்பிட்டுள்ளார். தவறான நோக்கத்துடன் தற்கொலைக்கு இந்த அட்சரத்தை பயன்படுத்தினால் உயிர் பிரியாது. அப்படி பயன்படுத்தும் பட்சத்தில் ஞான வாழ்க்கைகே கொண்டு செல்லுமே தவிர உடலைவிட முடியாது.

பெத்தவங்கள ஏன் அம்மா அப்பான்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?அ – உயிரெழுத்து. ம் – மெய்யெழுத்து . மா – உயிர் மெய்யெழுத்து. அதே போல தான் அப்பா..!! . தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். . இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!! "மம்மி - டாடீன்னு" இனிமேலாவது, கூப்பிடவேனாமே.. உயிர் எழுத்துகளும் உண்மை கோள்களும்.

நமது உடலில் "வீணா தண்டு " என்னும் முதுகு தண்டில் நாம் சுவாசிக்கும் மூச்சானது மூன்று பிரிவாக (channels) பிரிந்து (இடகலை , பிங்கலை, சுழி) உச்சி முதல் குதம் வரை சென்று 32 அடிப்படையான உறுப்புகளுக்கு சக்தி பரிமாற்றம் செய்கின்றன.

இவை ஒரு நாளைக்கு 21,600 மூச்சாக பெரியோர்கள் கணக்கீடு செய்துள்ளனர்.இந்த மூச்சானது முதுகு தண்டின் வழியாக செல்லும் போது ஏழு இடங்களில் சுழித்து ( முடிச்சு போன்றது ) செல்கின்றன. இவற்றை "கிரந்தி" (முடிச்சு) என்பர். நவீன அறிவியலார் இவற்றை நாளமில்லா சுரப்பிகள் என்கின்றனர் (Endo glands ). யோக நூல்கள் "ஆதாரம் " என்றும், குண்டலி சக்தி பாயும் "சக்தி பீடங்கள்" என்றும் எடுத்துரைகின்றது. இவ்வாறு இந்த மூச்சு சுழித்து பரவும் போது ஏற்படுத்துகின்ற ஓசைக்கு "நாதாந்தம்" என்று பெயர். இந்த நாதாந்தம் ஏழு நிலைகளில் ஏற்படுத்தும் ஓசைக்கு ஏற்ப வடிவம் கொடுத்தனர். இவையே எழுத்து என்று பெயர் பெற்று வழங்கி வருகிறது. (ஏழு + அத்துக்கள் ) அத்து என்றால் முடிச்சு என்று பொருள். இவை "ஏழு சுரங்களாக " சங்கீதத்தில் சொல்லபடுகிறது. இவற்றை வகை படுத்தி "இராகங்கள்" என்று பாடி வருகின்றனர். இதையே "ஏழிசையாய் இசைப் பயனாய்" "ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம் " என்கின்றனர் மேற்படி எழுத்துக்கள் என்பன தமிழில் "உயிர் எழுத்துக்கள் " என்று போற்றப்படுகின்றன.

அவைகள் முறையே அ , இ ,உ எ, ஐ,ஒ ஓள, என்பன. இவைகள் ஐம்பத்தொன்று அச்சரமாக விரியும். இதை "சிதம்பர ரகசியம்" என்பர். ( இவற்றை சற்குருநாதர் தாள் பணிந்து பெறுக ). சுவாசம் ஆனது இந்த ஏழு ஆதார மையங்களில் செல்லும் போது எப்படி ஓசை உண்டாகின்றதோ அது போன்றே ஒளியும் அவ்விடங்களில் உண்டாகிறது. இதையே " ஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய்" என்பது. இது அகத்தில் நடப்பது. இந்த ஒளியை "கோள்கள்" என்று பெரியோர்கள் குறித்தனர். கோ என்றால் ஒளி ஆகும். கோயில் என்றால் ஒளி உள்ள இடம் என்று பொருள்.மேற்படி கோள்கள் மூலம் மனிதருக்கு "மனம்" என்ற அலையும் காற்று உண்டாகிறது. இவற்றை கோள்கள் மூலம் எடுத்துரைத்தனர். இதனால் ஏற்படும் (வாயு சுழலுவதால் ) உச்ச, நீச்ச, ஆட்சி படி ஒரு கோள் என்றனர். பிங்கலை - சூரியன் (மனம்) இடகலை - சந்திரன் (புத்தி ) சூரியனாகிய மனம் சந்திரனாகிய புத்தியை உச்ச பலத்தால். கூடும் போது "துணிவு" என்னும் "செவ்வாய்"தோன்றுகிறது (பிங்கலை) . சந்திரன் என்னும் புத்தி உச்ச பலத்தால் சூரியனை கூடும் போது "நுட்பம்" என்னும் "புதன்" தோன்றும் (இடகலை). சூரியன் என்னும் மனம் நீச்சம் என்னும் குறை பெறும் போது "மறதி" என்னும் "சனி " தோன்றுகிறது (பிங்கலை). சந்திரன் என்னும் புத்தி நீச்சம் பெறும் போது "மயக்கம்" என்னும் "இராகு" தோன்றுகிறது (இடகலை). மறதி என்னும் சனியும் மயக்கம் என்னும் இராகுவும் உச்சத்தில் கூடினால் "நூதனம்" என்னும் "குரு " தோன்றுகிறது

மறதி என்னும் சனியும் மயக்கம் என்னும் இராகுவும் நீச்சம் பெறும் போது "களிப்பு" என்னும் "சுக்கிரன்" தோன்றும். இவை அல்லாமல் நாடியானது "சுழியில்" ஓடும் போது "அறிவு " என்னும் "கேது" உண்டாகிறது. இதை கொண்டு தான் அறிவு என்பதை கேதுவுக்கு கொடுத்தனர். கேதுவை அறிவுக் கடவுளாக "கணபதி" என்றனர். சித்தர்களும் இந்த அறிவு என்னும் "சுழியை" போற்றி வணங்கினர். இதனாலே தான் சித்தர்களுக்கு கோள்களின் பாதிப்பு இல்லை என்பர்.






இளமை பருவகாலங்கள்

1--0 வயது முதல் 6  வயது  வரையிலான பருவம்-குழந்தை
2--1 வயது முதல் 7 வயது  வரையிலான பருவம் –  பாலன்
3-- 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
4-- 11 வயது  முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
5--15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
6--16 வயதிற்குண்டான பருவம் – விடலை
7--17 வயது முதல் 30 வரையிலான பருவம் –  காளை
8-- 30 வயதுக்கு மேலான பருவம் –  முதுமகன்
1--0 முதல் 8 வயது வரை சிறுமிகள்
2-- 5 முதல் 8 வயதுப் பெண் - பேதை.
3-- 9 முதல் 10 வயதுப் பெண் - பெதும்பை.
4--11 முதல் 14 வயதுப் பெண் - மங்கை.
5-- 15 முதல் 18 வயதுப் பெண் - மடந்தை.
6-- 19 முதல் 24 வயதுப் பெண் - அரிவை.
7-- 25 முதல் 29 வயதுப் பெண் - தெரிவை.
8-- 30 முதல் பெண் - பேரிளம்பெண்.

தமிழ்தேசியம் பகுதி----5

அரேபிய ஏபிரகாமிய, ஐரோப்பிய கிறிஸ்தவ தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ்த் தேசிய கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர். 

அதேபோன்று அரேபிய ஏபிரகாமிய இஸ்ஸாமிய தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ்த் தேசிய கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில்  தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர். 

கால்மாக்ஸ், பிடல் கஸ்ரோவை, விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும், கம்யூ னிஸ்ட், சோசலீசம், லெனினியம், மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக  ஏற்றுக் கொண்டவர்கள்  தமிழ் தேசியத்தின் கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர். 

பைபில், குரான், கம்யூனீசம், சோசலீசம், லெனினியம், மாவோயிசம் போன்ற அன்னிய கோட்பாட்டு சித்தாந்தங்கள் தமிழுக்குள் அடங்கமாட்டாது என்கின்ற காரணத்தினால் தமிழ் தேசிய கோட்பாட்டிற்குள் என்றும் அடங்க மாட்டாது.


அன்னிய தேசிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களை தமிழ் தேசியமாக நிறுவிக்கொள்ள தமிழ் ,தமிழர், நாம் தமிழர், தமிழ் தேசியம், தமிழர் தேசத்தை தமிழர்தான் ஆழவேண்டும் என்றும்  சற்று உரக்க கூவ வேண்டியுள்ளது.

Monday 17 August 2020

இறைவன் அருளிய முருக அவதாரமே தமிழ்தேசியம்.



                                                                ஓம் முருகா.

ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ் சிவனின்  நெற்றி கண்ணில் இருந்து  பொறிகளாக வெளிப்பட்ட  தமிழ் தேசியம்  பொய்கை நதியில் பட்டதும் அவை ஆறு குழந்தைகளாக முருகப் பெருமானாக  அவதரித்த நன்னாள் வைகாசி விசாக  ஆகும்.

 அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து வர. பின் ஒருநாள் அந்த ஆறு குழந்தைகளுக்கும் தாயான பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கையில், பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும் முருகன் தோன்றினார் என்கிறது கந்த புராணம்.

முருகனின் நெற்றியில் இருக்கின்ற திருநீறும் பொட்டும், கையில் ஏந்தி இருக்கின்ற வீரவேல் முருகனின்  கலாச்சார பண்பாட்டு உடைகளும் அனைத்தும் பார்வைக்கும்  அத்துடன் முருகனின் தமிழ் பெயர்கள் அனைத்தும் இனைந்து தமிழன் என்று சொல்லும்.


தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தனி நிலை எனப்படும் ஆயுதமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது. மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு.

முருகனின் பெயர்கள் அனைத்தும்தமிழ் தெய்வம் என்றே அடையாளப்படுத்தும்  அதேவேளை தமிழ்தேசியத்தின் அடையாளத்தின் குறியீடாகும். 

முருகா என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்கள் உண்டு. முருகனின் பெயர்களில் முருகன். குமரன், குகன் ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கவை. இதனை அருணகிரிநாதர், முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய், என்று கந்தரநுபூதியில் குறிப்பிட்டுள்ளார்.

முருகா என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகிச் சொன்னாலும் இனிமையான வாழ்வு அமையும். ‘மு’ என்பது திருமாலையும் ‘ரு’ என்பது சிவபெருமானின் அம்சத்தையும் ‘க’ என்பது பிரம்மனையும் குறிக்கும். முருகனின் தமிழ் பெயர்கள் யாவும் தமிழன் என்று அடைாளப்படுத்தும் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளில் முக்கியமான கூறு ஆகும்.

தமிழ் தேசியத்தின் அவதாரமான ஆறுமுகன் பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும்  தோன்றினார்.ஆறு முகனின் தெய்வீக அடையாளங்கள்  யாவும் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளே ஆகும்.

முருக வழிபாடான தமிழ் வழிபாட்டை நிராகரிக்கின்றவர்கள் அத்துடன் முருகனை யாக அடையாளப்படுத்தி படங்களை வெளியிடுபவர்கள் அனைரும் தமிழின அழிப்பாளர்கள்.

Sunday 16 August 2020

நாதஸ்வர இசை (Nathaswaram & Thavail)

P S Balamurugan & K P Kumaran

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
https://www.youtube.com/watch?v=khjDCmOvUU8

இசை கேட்டால்
https://www.youtube.com/watch?v=-pR3bIdvbeo

ஆயர்பாடி மாளிகையில்
https://www.youtube.com/watch?v=t1KjAcnX-B4

மருதமலை மாமணியே முருகையா
https://www.youtube.com/watch?v=COx9vDHpryk

Nathaswaram / Thavil on Day 19 of Mahotsavam 2018 at Ealing Kanagathurkai Amman Temple
https://www.youtube.com/watch?v=BCj024hBsus