Friday 30 July 2021

உலக சைவ பேரவையின் பிரகடணம்.

இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள் நாட்டு யுத்தத்தால் உடைந்து அருகிவரும் சைவ ஆச்சிரமங்களையும் ஆதீனங்களையும் மீண்டும் இயக்க வைத்தல்.

இதற்காக தாயகத்தில் இயங்குகின்ற அனைத்து ஆலயங்கள்,  சைவ அமைப்புகள் இந்து அமைப்புகள்,  சைவ பெரியாா்கள், ஆலய குருமாா்களின் அமைப்புகள் ஆதரவைப் பெற்று, அவர்களின் பங்களிப்புடன் அவர்களை முன்னிலைப்படுத்தி  இறை தொண்டர்களாக நாம் செயல்படல்.

ஆலயங்களை முன்னிலைப்படுத்தி ஆலயங்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் பெற்றுக் கொடுத்து அதன் ஊடாக கிராமங்களில் வறுமையில் வாழும் சைவ மக்களை மீட்டு எடுத்தல் அவர்களுடைய பொருளாதாரத்தை வளம்படுத்துதல், சைவ பிள்ளைகளின் கல்வியை வளம்படுத்த உதவுதல். அறநெறிப் பாடசாலைகளை மீண்டும் இயக்க வைத்தல், கிராமங்களை வழிபடுத்துதல்.

இலங்கையின் உள் நாட்டு அரசியல் காரணத்தால் தங்கள் வாழ்வுகளை இழந்து தவிக்கின்ற மலையக மக்களுக்கு தேவையான ஆதரவுகளை ஆலயங்களின் ஊடாக பெற்றுக் கொடுத்தல்.

உள் நாட்டு யுத்தத்தால் உடைந்து போன தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவுகளை மீளக்கட்டியெழுப்பி  மீண்டும் சகோதரத்துவ சூழ்நிலையை உருவாக்குவதற்கு இந்து பெளத்த பெளத்த பீடங்களுடன் இடையில் நல்லுறவுகளை மேற்கொள்ளுதல்.

சங்க இலக்கியங்கள்  பேசிய  சைவ திருக்குறள் பேசிய  தமிழர்களின் அரசியல் நெறிகள்,   தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், அன்பேசிவம் என்ற உயிர்நேய நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும் மீள்கட்டுமாண செய்தல். அத்துடன் மக்களின் வாழ்வியலை மேம்படுத்துதல்.

இந்தியா மலேசியா சிங்கப்பூர் மொறிசியஸ் பேன்ற அனைத்துலகில் இயங்குகின்ற சைவ இந்து அமைபுகளுன் உறவை பலப்படுத்தி உலகெங்கும் இந்து சைவசமயம் நெறிகள் கிடைக்கும் வகையில் உதவுதல். இதன்மூலம் மேன்மை கொள் சைவ நீதி அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பை அளித்தல்.

உள் நாட்டு யுத்தத்தால் ஏற்பட்ட கலை கலாச்சார பண்பாட்டு சீீரழிவில் இருந்து தமிழினத்தை மீட்டெடுத்தல்.  அத்துடன் தமிழன் என்று அடையாளப் படுத்துகின்ற அனைத்து அடையாளக் கூறுகளையும் மீளக் கட்டமைத்தல்

சிவகுற்றம் செய்யாதவர்களாக, இந்து மக்கள் வாழ்வதற்கு உதவி செய்தல். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள வன்முறைகளை இல்லாது செய்ய உழைத்தல்.

தமிழ் மொழியையும் சைவ நெறியையும் என்றும் பிரிக்க முடியாதவாறு இலங்கை எங்கும் மீண்டும் நிலைநாட்டுதல்.

கிறிஸ்தவ இஸ்லாமிய திட்டமிட்ட மதத் திணிப்புக்களால் இனமாற்றப்பட்ட மக்களை மீட்டெடுத்து மீண்டும் தமிழர்களாக தமிழின மாற்றம் செய்தல்.

நிறுவன முதல்வர்.


No comments:

Post a Comment