Thursday 11 June 2020

லண்டனில் 300 வருட பழமை பொகீஷங்கள் எல்லாம் இடிக்கப்படுகிறது- வரலாறே நாசம்

பிரிட்டனில் அதுவும் லண்டன் மற்றும் பிரிஸ்டல் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களில் உள்ள பல சிலைகளை அகற்ற மாநகர கவுன்சில்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இவை அனைத்துக்கும் காரணம் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் என்ற கறுப்பின நபரும். அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களும் தான்.
பிரித்தானியாவின் தெருக்களில் பல நூறு சிலைகள் உள்ளது. அதில் பெரும்பான்மையானவை பிரபுக்களின் சிலைகளே. இவர்கள் தான் பிரித்தானிய பேரசின் தூண்களாக அந்த காலத்தில் செயல்பட்டவர்கள். சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இவர்கள் தான், கொத்தடிமைகளை வைத்திருந்தார்கள். மேலும் ஏஜன்சி போல செயல்பட்டு, கொத்தடிமைகளை பிரிட்டன் கொண்டு வருவது. அவர்களை தேடிப் பிடிப்பது என்பது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்.
இவர்களில்… சர் தொமஸ், றொபேட் விஸ்கவுண்ட், எட்வாட், பிரான்சிஸ் ட்ரேக், டியூக் ஆப் வெலிங்டன், என்று பல பிரபுக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆங்காங்கே சிலைகளும் உள்ளது. தற்போது இந்த சிலைகள் அகற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. மேலும் 2ம் உலகப் போர் காலத்தில் திறமை மிக்க பிரதமராக விளங்கிய வின்சன் சர்சிலும் ஒரு இனவாதியே.
நாம் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அவர், இந்தியர்களை நாய் என்று வர்ணித்தவர். மேலும் வங்க தேசத்தில் எற்பட்ட மனிதப் பேரவலத்திற்கு காரணமாவர். இந்தியா பாக்கிஸ்தான், வங்க தேசம் ஒன்றாக இருந்த காலத்தில், அங்கே அவர்கள் நாய்களை போல குழந்தைகளை பெற்று வருகிறார் என்ற பொருள்பட பேசியும் உள்ளார். வங்க தேசத்தில் ஏற்பட்ட ஒரு நோய் பரவலை வேண்டும் என்றே கட்டுப்படுத்தாமல் விட்டு. பலர் இறக்க காரணமாக இருந்தவரும் இந்த வின்சன் சர்சில் தான்.  இதனால் 4.3 மில்லியன் மக்கள் இறந்தார்கள். இந்த வரலாற்றை படிக்க வேண்டுமா இங்கே அழுத்தவும்  Bengal Famine
இதனால் லண்டனில் உள்ள அவரது சிலையையும் உடைக்க வேண்டும் என்று கறுப்பர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் அதற்கு பொலிஸ் பாதுகாப்பு பலமாக உள்ளது. காரணம் என்னவென்றல் வின்சன் சர்சிலே ஹிட்லரை எதிர்த்து பலமாக தாக்குதல் நடத்தியவர். அவரை ஒரு இரும்பு மனிதருக்கு ஒப்பாக பிரிட்டன் நாட்டு மக்கள் மதிக்கிறார்கள்.
அதிர்வுக்காக கண்ணன்

No comments:

Post a Comment