Friday 26 June 2020

தமிழர் சனத்தொகையில் 6 % #வீழ்ச்சி

கடந்த 60 வருடங்களில்கிழக்கு சனத்தொகை விகிதத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம் புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை,

கடந்த 60 வருடங்களில் :-

தமிழர் சனத்தொகையில் 6 % #வீழ்ச்சி
முஸ்லிம் சனத்தொகையில் 5 % #வளர்ச்சி
1960 இல் அம்பாறை தேர்தல் தொகுதி
1963 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கம்
1977 இல் திருகோணமலையில் சேருவில தொகுதி உருவாக்கம்

திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் சனத்தொகையில் பெரும் வளர்ச்சி – தற்போதைய சனத்தொகையில் 50 %1971 – 2001 பெருமளவு எல்லை மாற்றங்களுக்குள்ளான அம்பாறை தேர்தல் தொகுதி கிழக்கு வாழ் மூவின மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளாக சனத்தொகை, அரசியல் ,பொருளாதாரம் , கல்வி போன்றவற்றை கருதலாம். மேலும் தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சிக்குரிய முக்கிய காரணியாக  கடந்த நானுறு வருடங்களாக கிறிஸ்தவ நிறுவனங்களினால் நடாத்தி முடிக்கப்பட்ட தமிழர் அழிப்புடன் இனைந்து கொண்டதமிழீழ போராட்ட களத்தில்  ஏற்பட்ட இடம்பெயர்வும் , உயிரிழப்புகளும், மதமாற்றங்களின் ஊடாக ஏற்பட்ட தமிழ் இன அழிப்பும் முக்கிய காரணியாக காணப்படுகிறது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மிக நீண்டகால யுத்தம் கிழக்கு மாகாணத்திலும் பல பாரிய பின்னடைவுகள தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்ற யுத்தத்தால் அண்ணளவாக 10 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வட கிழக்கில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இவற்றுள் கிழக்கு மாகாணத்திலிருந்து அண்ணளவாக 50,000 பேர் வரை ஐரோப்பிய,அமெரிக்க, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும், மற்றும் 11,000 பேர் வரை முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி, நிலாவெளி, சம்பூர் மூதூர் போன்ற பகுதிகளிலிருந்து இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள பல பகுதிகளிலும் இடம்பெயர்ந்துள்ளனர் .

அத்தோடு நீண்ட போரில் அகப்பட்டு அப்பாவி மக்களாகவும், காணாமல் போனமையினாலும் , போராளிகளாகவும் பல ஆயிர கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை மாய்த்துள்ளனர் . இதனைவிட எண்ணற்ற இளம் பெண்கள் திருமணமாகி மிக குறுகிய காலத்தில் தமது கணவன்மாரை இழந்து விதவைகளாக்கப்பட்டும் , மேலும் போர் சூழலால் திருமண வயது நீண்டு போனமை, திருமணமானாலும் போர் சூழ்நிலையால் பிள்ளைகள் பெறாமை, போன்ற காரணங்கள் தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .

தமிழ் மக்களிடையே காணப்படும் சனத்தொகை கட்டுப்பாடு

முக்கியமாக இந்த கலாசாரம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் கடைப்புடிக்கப்பட்டுவருகின்ற ஒரு விடயமாக உள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வகையில் குடும்பங்கள் அமைவது தமிழ் சமூகத்திடம் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் அதே வேளை சகோதர சமூகம் சராசரியாக கடைசி நான்கு குழந்தைகளை வரையிலும் பெறுகின்ற தன்மை தற்போதும் காணப்படுகிறது .

திருகோணமலைமாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்ட சேருவேல தேர்தல் தொகுதியும் அத்தோடு இந்த மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்றமும்  1977 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சேருவேல தேர்தல் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொகுதியானது கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெருன்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்திய தொகுதியாகும். அத்தோடு ஒரு கட்ட குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு, தெற்கு பகுதிகளில் பொலநறுவை மற்றும் அனுராதபுரம் பகுதிகளை அண்டிய வளமுள்ள நில பரப்புகளையும் மையப்படுத்தியும் ,இரண்டாவது கட்ட குடியேற்றம் வேலைவாய்ப்புகளின் ஊடாக திருகோணமலை நகர் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .இம் மாற்றாங்களோடு மொத்தமாக அல்லது கூடுதலான பட்சத்தில் சிங்கள சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் வரை கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு தன்மையை உருவாக்கியுள்ளது

மேற் குறிப்பிட்ட மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 70 களுக்கு முன் தமிழ் முஸ்லீம் இனங்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணம் தற்போது மூன்றாவதாக சிங்கள இனத்தையும் சேர்த்து பார்க்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாற்றமானது பல பிரதிகூலமான தாக்கங்களை முக்கியமாக தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

1977 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சேருவேல தேர்தல் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது.இந்த தேர்தல் தொகுதியானது கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெருன்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்திய தொகுதியாகும். அத்தோடு ஒரு கட்ட குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு, தெற்கு பகுதிகளில் பொலநறுவை மற்றும் அனுராதபுரம் பகுதிகளை அண்டிய வளமுள்ள நில பரப்புகளையும் மையப்படுத்தியும் ,இரண்டாவது கட்ட குடியேற்றம் வேலைவாய்ப்புகளின் ஊடாக திருகோணமலை நகர் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம் மாற்றாங்களோடு மொத்தமாக அல்லது கூடுதலான பட்சத்தில் சிங்கள சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் வரை கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு தன்மையை உருவாக்கியுள்ளது

மேற் குறிப்பிட்ட மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 70 களுக்கு முன் தமிழ் முஸ்லீம் இனங்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணம் தற்போது மூன்றாவதாக சிங்கள இனத்தையும் சேர்த்து பார்க்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாற்றமானது பல பிரதிகூலமான தாக்கங்களை முக்கியமாக தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

மிக முக்கியமாக தமிழ் மக்களின் சனத்தொகை 1963 இல் 45% இல் இருந்து 2018 இல் 38% ஆக மாறியதோடு அதிகூடிய சனத்தொகையாக இருந்த தமிழ் மக்கள் தற்போது இரண்டாவது நிலைக்கு_தள்ளப்பட்டுள்ளனர் . தற்போதைய சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை வைத்து பார்க்கும் போது தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்திற்கு 1.5 % மும், முஸ்லிம் மக்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 2 % மும் ஆகவுள்ளது . இந் நிலை தொடருமாயின் ஒரு குறிப்பிட காலப்பகுதியில் தமிழ் மக்களின் சனத்தொகை 35% ஆக மாறக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றது .
தமிழ் சமூகத்தை ஒரு முறையான திட்டமிடலுடனும் ஒரு புதிய தூர நோக்குள்ள கொள்கையுடனும் கொண்டு செல்லாவிடின் அரசியல் , பொருளாதாரத்தில் , நலிவடைந்தும் , மற்றும் கல்வியில் பின்னடைவு காணும் ஒரு சமூகமாகவும் மாறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் கூடுதலாக கானப்படுகின்றது.

தமிழ் மக்கள் தொடர்பான எந்த முடிவு எடுக்கும்போதும் இந்த சனத்தொகை மாற்றத்தையும் கருத்திற் கொண்டு முடிவுகள் எடுப்பதே மிகவும் பொருத்தமானதாக அமையும் அத்துடன் அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களின் சகல நிறுவனங்களையும் தமிழர் தேசத்தில் இருந்துவிரட்டியடைத்து சைவ நெறியை வளர்பதன் ஊடாகவே தமிழர் தேசத்தை பாதுக்க முடியும்.

No comments:

Post a Comment