Thursday 11 June 2020

சங்ககால தமிழர்களின் ஐந்திணை வாழ்வியல் வழிபாடுகள்.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.   

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை , குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5) என்றுரைக்கின்றார், தொல்காப்பியர்.

1-மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சித் திணை.

1. தெய்வம் - சேயோன்

2. உணவு - ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு

3. விலங்கு - புலி, யானை, கரடி, பன்றி

4. மரம் - அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5. பறவை - கிளி, மயில்

6. பறை - முருகியம், தொண்டகப் பறை

7. தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல், வேட்டையாடுதல்

8. யாழ் - குறிஞ்சி யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - சிறுகுடி, குறிச்சி

11. நீர் - அருவி நீர், சுனை நீர்

12. மலர் - காந்தள், வேங்கை , குறிஞ்சி


2-காடும் காட்டைச் சார்ந்த இடம் முல்லைத் திணை.

பொழுது - அ) பெரும்பொழுது : கார்காலம், ஆ) சிறுபொழுது: மாலை

1. தெய்வம் - மாயோன்

2. உணவு - வரகு, சாமை

3. விலங்கு - மான், முயல்ம்

4. மரம் - தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5. பறவை - காட்டுக்கோழி, சேவல்

6. பறை - ஏறுகோட் பறை

7. தொழில் - ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8. யாழ் - முல்லை யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - பாடி, சேரி

11. நீர் - குறுஞ்சுனை, கான்யாறு

12. மலர் - முல்லை , குல்லை , தோன்றி, பிடவம்

3-
வயலும் வயல்சார்ந்த இடம் மருதத் திணை.


1. தெய்வம் - இந்திரன் (வேந்தன்)

2. உணவு - செந்நெல், கரும்பு

3. விலங்கு - எருமை, நீர்நாய்

4. மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம்

5. பறவை - தாரா, நீர்க்கோழி

6. பறை - மணமுழவு, நெல்லரி கிணை

7. தொழில் - விதைத்தல், விளைத்தல்

8. யாழ் - மருத யாழ்

9. பண் - மருதப் பண்

10. ஊர் - ஊர்கள்

11. நீர் - ஆற்றுநீர், பொய்கை நீர்

12. மலர் - தாமரை, கழுநீர்


4-
 கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் திணை.

1. தெய்வம் - வருணன்

2. உணவு - மீன், உப்பு

3. விலங்கு - உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும் எருது), சுறா

4. மரம் - புன்னை , ஞாழல், கண்டல்

5. பறவை - அன்றில், அன்னம்

6. பறை - மீன்கோட் பறை

7. தொழில் - மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8. யாழ் - நெய்தல் யாழ்

9. பண் - நெய்தல் பண்

10. ஊர் - பட்டினம், பாக்கம்

11. நீர் - உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12. மலர் - நெய்தல், கைதை (தாழை)

5-
குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை திணை.  தெய்வம் – கொற்றவை.

காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்.

No comments:

Post a Comment