Friday 26 June 2020

SWRD பண்டாரநாயக்கா & தந்தை செல்வா

பாகம்--02

பிரித்தானிய எச்சங்களினதும், போா்த்துக்கீசர், ஒல்லாந்தர் போன்றவர்களின் எச்சங்களான மிஷனரிகளினதும் இருப்பையும் பாதுகாப்பையும் சுதந்திர இலங்கையில் உறுதிபடுத்த உருவாக்கப்பட்டதே தமிழ்-சிங்கள தேசிய முரன்பாடுகள் இதனை உருவாக்கி மோத வைப்பதற் கான நடைமுறைகளை நடைமுறைபடுத்த களத்தில் இறக்கப்பட்டவர்களே செல்வாவும் பண்டாவும்.

பிரித்தானிய மிசனரிகள் சுதந்திர இலங்கையில் பௌத்த சிங்களவர்களிடம்,  தமிழர்களிடமும் கிறிஸ்தவம் சிக்கி மரணித்து விடாமல் பாதுகாக்கவே பிரித்தானியாவின் பிரித்தாளும் மூலோபாய திட்டத்தை இலங்கையில் செயற்படுத்த உருவாக்கப்பட்டதே பெளத்த பேரினவாதமும் தமிழ் தேசியமும் ஆகும்.

சிங்களவர்களிடம் இருந்து கிறிஸ்தவத்தை பாதுகாக்க சிங்கள பெளத்த பேரினவாதத்தை உருவாக்கா 1930களில் சிங்கள மகா சபை என்கின்ற ஒன்றை உருவாக்கிய சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டார நாயக்கா என்ற கிறிஸ்தவர். இவர் சிங்கள வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும்  இவருக்கு சிங்களத்தில் எழுதவும் வாசிக்கவும் தெரியாது. இவருக்கும் சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் சம்மந்தமே இல்லை.
என்பது குறிப்பிடதக்கதாகும்.

தமிழர்களிடமும் கிறிஸ்தவம் சிக்கி மரணித்து விடாமல் பாதுகாக்ககிறிஸ்தவ நிறுவனங்களினால் களத்தில் இறக்கப்பட்டவரே
சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் இவரால் உருவாக்கப்பட்டதே தமிழரசு கட்சி.தன்னை  தமிழானாக அடையாளப்படுத்திக் கொண்ட தமிழரசு கட்சி நிறுவனர்  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வெள்ளைக்காரணாகவே இருந்தவர் இவருக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது காலத்தில் இவரின் மேடை பேச்சுகளை ஒலி வாங்கியில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் நிகழ்தினாா், பிற்காலங்களில் ஈழவேந்தன் அவர்கள் நிகழ்த்தினார்என்பது நீங்கள் அறிந்து கொண்ட விடையமே. .

 சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா தன் மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு 1950 களில் சிங்கள பௌத்த தேசியவாதத்தை கையிலெடுத்தார் இதற்கு எதிராக  தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளை ஏற்க மறுத்த உங்கள் தந்தை செல்வா
 தன் மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு தமிழ் தேசியத்தை கையிலெடுத்தாா்   இனவாதம் பேசிக் கொண்டு இருந்தாா்கள்.
 இதற்கு காரணம் 1883 ம் ஆண்டு கொட்டாஞ்சேனைக் பெளத்த மக்களின் எழுச்சியை  போன்று மீண்டும் கிறிஸ்தவத்திற்கு எதிரா பெளத்த எழுச்சி ஏற்படாமல் தடுத்து நிறுத்தி கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்கே ஆகும்.

 நானுறு வருட கிறிஸ்தவ ஆதிக்கத்திற்கு எதிராக தமிழர்களின் தமிழ் தேசிய எழச்சியை அழிப்பதற்கு 1948களில் தமிழ் தேசியத்தை கையிலெடுத்தவர்  உங்கள் தந்தை செல்வா அவர்கள்.    .

 மிஷனரிகளினதும், கிறிஸ்தவ மதத்தினதும் இருப்பையும் பாதுகாப்பையும் சுதந்திர இலங்கையில் உறுதிபடுத்த உருவாக்கப்பட்டதே தமிழ்-சிங்கள தேசியங்கள்.அதனை நடைமுறைபடுத்த இறக்கப் பட்டவர்களே செல்வாவும் பண்டாவும்.

1947லேயே வேருடன் பிடிங்கி எறியப்படும் நிலையில் இருந்த காலனித்துவ எச்சங்கள் நன்கு செழித்து வளர்ந்து இன்று பெரும் விருட்சமாக உள்ள இன்னிலையில்தான் சிங்கள தமிழ் இனவெறுப்பு பெரும் நெருப்பாக எரிந்தது. தமிழ் இரத்த ஆறு களாக தமிழர் தேசம் எங்கும் பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கின்றது.என்று அன்னிய காலனித்துவ எச்சங்களான சிலுவைகள் வேருடன் பிடிங்கி எறியப்படுகின்றாா்களோ அன்றுதான் தமிழர்களுக்கு சுதந்திரம்.அந்நாளை உருவாக்க வேண்டியது தமிழர்கள் எல்லோரினதும் கடமை. உங்கள் கடமைகளையாற்ற உயிர் தமிழுக்கென்று கூறிபுறப்படுங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/swrd.html


No comments:

Post a Comment